Saturday 29 January, 2011

வளைகுடா நாடுகள்: சவுதி அரேபியா


தட்பவெப்ப நிலை வேறுபாடுகளினால் ஏற்ப்படும் பாதிப்புகள்  மழை வளங்கள் குறைவு, வெப்ப நிலை அளவுகளின் ஏற்றத் தாழ்வுகள், கால நிலை தவறி பெய்யும் மழை இதுபோன்ற காரணங்கள் மனித வாழ்க்கைக்கு மிகப்பெரிய சவால்களை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருக்கின்றன எத்தனை அதிவேகத்தின் விஞ்ஞான வளர்ச்சிகள் இருந்தாலும் இயற்க்கையின் சீற்றத்துக்கு முன் அவை பின்னடந்ததாகவே உள்ளன மேலும் அவை அத்தனையும் இயற்க்கைக்கு எதிராகவே அமைந்துவிடுகின்றன.

வளைகுடா நாடுகளை பொருத்தவரை அதாவது பாலைவன நாடுகளை பொருத்தவரை, மழைவளம் மிகக்குறைவு, வெப்பம் மிகுந்த நாடுகள் என்ற பொதுவான ஒரு கண்ணோட்டம் உண்டு வருடத்திற்க்கு ஒருமுறை மழை பெய்வதே கடினம், அனல் காற்றும், மணல் புயலும் அடிக்கடி ஏற்ப்படக்கூடிய இயற்க்கை சூழலைக் கொண்ட நாடுகள் அவை, எண்ணெய் வளம் மிகுந்த நாடுகள் செல்வம் கொழிக்கக் கூடிய நாடுகள் அதனால் அதன் தொழில் நுட்பங்கள், கட்டுமானங்கள், பொருளாதார வளர்ச்சிகள் அனைத்திலும் அபரித வளர்ச்சி கண்டுவரும் நாடுகள் அவை. பெரும்பாலனோர் வருமானத்திற்க்காக வளைகுடா நாடுகளை நோக்கி பயணிக்கும் அளவுக்கு, அயல்னாட்டு தொழிலாளர்களை பயன்படுத்தி வளர்ச்சி கண்டுவரும் நாடுகள் வளைகுடா நாடுகள்.

விண்ணைமுட்டும் கட்டிடங்கள், பெரிய பெரிய தொழிற்சாலைகள், ஆடம்பர வீடுகள்  என கட்டிடக்கலையில், அயல்னாட்டு வல்லுனர்களை பயன்படுத்தி அபரித வளர்ச்சி கண்டிருந்தாலும்  சமிப காலங்களாக இயற்க்கை சீற்றங்களினால் ஏற்ப்படும் பாதிப்புகள் வளைகுடா நாடுகளின் கட்டிடக்கலையின் பின்னடைவை உணர்த்தியுள்ளன, சமீப காலங்களில் இந்த வளைகுடா நாடுகளில் பெய்ந்து வரும் மழை, அன்னாட்டு  நகர அமைப்பிலும் கட்டிடக் கலையிலும் உள்ள பின்னடைவை மிக அழகாக எடுத்துக் காட்டியுள்ளது.

சில தினங்களுக்கு முன் சவுதி அரேபியாவின் முக்கிய நகரமான ஜித்தா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக மிகப் பெரிய பாதிப்புகளை சந்தித்தது அந்நகரம், சாலைகளும், தொழிற்சாலை பகுதிகளும், வீடுகளுள்ள பகுதிகளும் வெள்ளக்காடானது, மழையினால் பெருக்கெடுத்த வெள்ள நீர் வடிய தேவையான வடிகால் வசதிகள் இல்லாத காரணத்தால் மழை நீர் அங்கங்கே தேங்கியது நகரம் முழுவதுமே வெள்ளக்காடானது இதனால் எண்ணற்ற விபத்துக்கள், மக்களின் இயல்பு வாழ்க்கை மிகப் பெரியளவில் பாதிக்கப்பட்டது, வாகனங்கள் நீரில் முழ்கின. வெள்ள நீர் ஒரு ஆள் முழ்கும் அளவுக்கு மேலாக தேங்கியிருந்தது இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை, வெளியே சென்றவர்கள் திரும்ப வீடு வந்து சேர இயலானிலை. முறையற்ற கட்டிட கட்டமைப்புகளும் போதிய வடிகால் வசதியின்மையும் இதற்க்கு முக்கிய காரணங்கள், சவுதி அரேபியாவில் மழையே பெய்யாது என்ற நோக்கத்தில் நகரின் அமைப்பை உறுவக்கினார்களோ என எண்ணத் தோன்றுகிறது, இது போன்ற மற்றுமொரு அனுபவம் அந்நகரருக்கு கடந்த ஆண்டு கிடைத்தது அப்பொழுது பெய்த கடும் மழையில் நூற்றுக்கு மேலானோர் உயிரிழந்தனர் அந்த பாதிப்பிற்க்கு பின்பும் அந்நகரின் கட்டிடக் கலையிலும் நகர அமைப்பிலும் எந்தவித மாற்றமும் இல்லை அதன் விளைவே சில தினங்களுக்கு முன் பெய்த மழையிலும் கடுமையான் பாதிப்பை சந்திதுள்ளது.

No comments:

Post a Comment