Thursday 8 September, 2016

ஒரு வாரம் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள்







தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அவற்றை 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், 
உடலில் நல்ல மாற்றங்களைக் காணலாம். மேலும் தேங்காய் தண்ணீர் மிகவும் சிறப்பான உடலை சுத்தப்படுத்தும் 
பானங்களுள் ஒன்று. 

* தேங்காய் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நோயெதிர்பு மண்டலம் வலிமைப் பெறுவதோடு, சிறுநீர் பாதை
தொற்றுகள், ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும்
வைரஸ்களையும் தேங்காய் தண்ணீர் அழித்து வெளியேற்றிவிடும்.
* தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலின் ஆற்றலை
அதிகரிப்பதோடு, 
தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து, தைராய்டு சுரப்பி சீராக செயல்பட
வழிவகுக்கும்.

* சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால், தேங்காய் தண்ணீரைக் குடித்து வருவதன் மூலம், சிறுநீரக நோய்களைக்
கட்டுப்படுத்தலாம். மேலும் தேங்காய் தண்ணீர் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, சிறுநீரக
கற்கள் இருந்தால், அவற்றைக் கரைத்துவிடவும் செய்யும்.
* செரிமான பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீரை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால்,
செரிமான பிரச்சனை நீங்குவதை நன்கு உணரலாம். ஏனெனில் தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து வளமாக
நிறைந்துள்ளது. இவற்றை தெடர்ந்து குடித்து வந்தால், வாய்வு தொல்லையில் இருந்தும் விடுபடலாம்.
* தேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும், உடலில் கொழுப்புக்கள் சேராது. மேலும் இதனை குடித்தால், பசி
கட்டுப்படும். இதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
* இரவில் அதிகமாக மது அருந்திவிட்டு, மறுநாள் காலையில் எழும் போது கடுமையான தலைவலியை உணரும் போது,
தேங்காய் தண்ணீர் குடித்தால், தலைவலி நீங்குவதோடு, ஆல்கஹால் மூலம் உடல் வறட்சி அடைவது தடுக்கப்பட்டு,
ஹேங்ஓவர் பிரச்சனை நீங்கும்.
* தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, நாள் முழுவதும்
பொலிவான தோற்றத்துடனும், போதிய ஆற்றலுடனும் செயல்பட முடியும்.
* கர்ப்பிணிகள் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில்
இருந்து விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Wednesday 11 January, 2012

கண்மாயில் வீசப்பட்ட, பிறந்து 10 மணி நேரமான பெண் குழந்தை

வெகு சமீபத்தில் படித்த ஒரு பத்திரிக்கை செய்தி


இளையான்குடி:தாயமங்கலம் அருகே, கண்மாயில் வீசப்பட்ட, பிறந்து 10 மணி நேரமான பெண் குழந்தை, உயிரோடு மீட்கப்பட்டு, சிவகங்கை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் அருகே கண்மாயில், கிராமத்தினர் நேற்று காலை மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, குழந்தையின் அழுகுரல் கேட்டது. மாடு மேய்த்தவர்கள் அங்கு சென்ற போது, அரை அடி தோண்டப்பட்ட பள்ளத்தில், பெண் குழந்தை கிடந்ததைக் கண்டனர்.வி.ஏ.ஓ.,க்கும், போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. வழக்கமான நடைமுறைகளுக்கு பின், குழந்தை, தாயமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டது. குழந்தையை பரிசோதித்த டாக்டர் ராஜேஸ்வரி கூறுகையில், ""குழந்தை பிறந்து, 10 மணி நேரம் தான் ஆகியிருக்கும்; அதன் எடை, 2.5 கிலோ உள்ளது,'' என்றார்.உடல் நலக்கண்காணிப்புக்காக, குழந்தை, சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. குழந்தையை வீசிச் சென்ற பெண் யார் என, போலீசார் விசாரிக்கின்றனர். - தினமலர் முதல் பக்கம் » சம்பவம் செய்தி »தமிழ்நாடு.


நாகரீகத்திலும், படிப்பறிவிலும் மேலும் உலகம் வியக்கும் விஞ்ஞான அறிவிலும் முன்னோக்கி நடை போடுவதில் ஒரு உதாரணமாக விளங்கும் நமது தமிழ் சமுதாயத்தில் பெண்ணினத்துக்கு எதிரான அவலங்கள் ஆங்காங்கே நடந்தேறுவதை கானும் போது மேற்சொன்ன சாதனைகள் எல்லாம் அதாள பாதாளத்தில் தள்ளி நசுக்கப்பட்ட அசிங்கங்களாய் பல்லிழுப்பதை மனம் வெட்கி உணரத்தான் முடிகிறது. 

கண்மாயில் வீசப்பட்ட பெண் சிசுக்கள், குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பெண் சிசுக்கள் மேலும் தெரு நாய்களால் கடித்து குதறப்பட்ட பெண் சிசு பிரேதங்கள் இது போன்ற மன்னிக்க முடியாத நிகழ்வுகளை பத்திரிக்கைகளில் பார்க்கும் பொழுது, பெண்ணினத்துக்கு எதிரான அராஜகங்கள் சில தமிழகத்து கிராமங்களில் இன்னும் களையெடுக்கப்படாமல் புறையோடியிருப்பதை உணர முடிகிறது.

பெண்ணே பெண் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுப்பதும், பெற்றவளே பெண் குழந்தையை தூக்கி வீசுவதையும் பார்க்கும் போது பெண்ணினத்துக்கு எதிரி பெண் தானா? என எண்ணத்தோன்றுகிறது, இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் இன்றய சமுதாயத்துக்கு சாதாரண செய்தியாகி போய்விட்டது. சாதாரண விஷ்யங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கூட இதுபோன்ற விஷயங்களுக்கு கொடுக்க முடிவதில்லை இந்த சமுதாயத்தால்!.

இந்த சமுதாயம் பெண்ணினத்தை எங்கு கொண்டு செல்கிறது என்பதை பெண்ணிமே உணர்ந்துக்கொள்ள முடியா சூழல் தான், தன் கையே தன் கண்ணை குத்திக் கொள்வது போண்ற பிரதிபலிப்புக்கள் உணருவார்களா? பெண்கள்!!!


மனிதன் ஒன்றின் தேவையை உணராதவரை அதன் முக்கியத்துவத்தை உணருவதில்லை இது பொருட்களுக்கு இடையிலான தேவை, அளிப்பு சமாச்சாரங்கள், ஆனால் ஒரு பொருளுக்கு சமமாக மனித உயிரினை கருதுவதை என்னவென்று சொல்வது, ஏன் பெரும்பாலன ஆண் வர்க்கங்கள் பெண்னினத்தை ஒரு போகப் பொருளாகத்தானே பார்க்கிறது, என்று மாறும் இந்த இழினிலை?

Tuesday 22 November, 2011

மெல்லச் சாகும் உயிர்கள் . . . .சுடுகாடாகும் கடலூர்


கல்வி நிறுவனங்கள், வியாபாரா கூடங்கள், தொழிற்சாலைகள் என ஒரு மாவட்டத்திற்க்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெற்று, கடலோரத்தில் அமைந்த இயற்க்கை எழில் மிகுந்த அழகிய மாவட்டம் கடலூர். அழகிய மாவட்டம் தான் மாசுப்படாமல் இருந்தது சிப்காட் என்ற ராட்சனின் கால் பதியாத வரை.
ஆனால் இன்று எல்லாம் தலைகீழ், இயற்க்கையின் சுத்தமான காற்றை சுவாசித்த மக்கள் இன்று அமிலங்களையும் அசுத்தங்களையும் சுவாசித்து அதன் விளைவால் தன் உடலில் தேவையில்லா வேதி வினைகளுக்கு உட்படுத்தி வெகு வேகமாக மரணத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மாவட்டத்தில் வேலையின்மை போகும், மாவட்டம் முன்னேறும் இன்னும் பலவித கனவுகளுடன், சிப்காட் தொழிற்சாலைகளுக்கு  தன் விவசாய நிலம் கொடுத்த விவசாயிகள் எல்லாம் தன் வாரிசுகளின் எதிர்காலங்கள் கேள்விக்குறியாக போனதை எண்ணி கண்ணீர்  விடுவதை தவிர அவர்களுக்கு வேறுவழியில்லை, ஏன் அவர்களின் சுகமான வாழ்க்கையும் சுகாதார கேடாகி போனது. இது தான் தன் விரலே தன் கண்ணை குத்தியது போலவாம்.
செயல்களின் விளைவுகள் அறியாமல் என்றோ தவறாக விதைக்கப்பட்ட விதை, அதன் விளைவுகளுக்கு ஆட்பட்டு கடலூர் மாவட்டமே சுடுகாடாகிக் கொண்டிருக்கிறது மெல்ல, மெல்ல, . . .
கடலூர் மாவட்டத்தை சுற்றுயுள்ள கிராம, நகர மக்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி, சுகாதாரக் கேடாகி, அமிலத்தில் நனைக்கப்பட்ட மலர்களாய், ஒவ்வொரு நாளும் புதிய புதிய நோய்களுக்கு ஆளாகி மரணத்தை நோக்கி வெகு வேகமாக பயணிக்கிறார்கள்.
கேன்சர் போன்ற கொடிய நோய்களையும்,பெயர் தெரியா புதிய நோய்களையும் அதன் மூலம் மரணத்தையும் பரிசாக சிப்காட் தொழிற் நிறுவனங்களிடமிருந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் கடலூர் மாவட்ட மக்கள். வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல், நாகார்ஜுனா எண்ணெய் நிறுவனம், மற்றும் பரங்கிப்பேட்டைக்கு அருகில் அமைய உள்ள அனல் மின் நிலையம். தேவைதானா இது.
எதிர்கால வாழ்க்கையே கேள்விக் குறியாகிவிட்ட நிலையில், சிப்காட் கெமிக்கல் தொழிற்சாலைகளுக்கிடையில் தன் வாழ்வையும், வாரிசுகளையும் குழித்தோண்டி புதைத்துக் கொண்டிருக்கும் மக்கள் விழித்தெழுவார்களா?
இது தனிமனித பிரச்சனை அல்ல! ஒரு மாவட்டத்தின் பிரச்சனை! சொந்த இடத்திலேயே கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமலும் உடல் ஆரோக்கியமும், உயிரும் கருகிக் கொண்டிருக்கும் அவல நிலை! தான் விரும்பி வாழ்ந்த சொந்த இடம் வெகு விரைவில் சுடுகாடாகி போகும் பரிதாப நிலை!
கடலூர் மாவட்ட நண்பர்களே! விழித்தெழுங்கள் இன்று உங்களின் அலட்சியம், நாளை உங்களையும் உங்கள் வாரிசுகளையும் குழித்தோண்டி புதைத்துவிடும் என்பது நிச்சயம், அப்புறப்படுத்தப் பட வேண்டும் இரசாயண உயிர்க் கொல்லிகள் சிப்காட்டிலிருந்து, இல்லையெனில் அகற்றப்ப்ட வேண்டும் சிப்காட் தொழிற்சாலை கடலூரிலிருந்து. தமிழகத்திலும் வேண்டுமா இன்னொரு போபால் விஷவாயு மரணச் சம்பவம்?
கடலூர் மாவட்ட நண்பர்களே! உங்கள், மற்றும் உங்கள் வாரிசுகளின் உயிர், எதிர்காலம் உங்கள் கையில்.
ஊடகத்து நண்பர்களே! தன்னார்வ தொண்டு நிறுவனங்களே! எங்களின் வாழ்கையும் வாழ்வாதாரங்களும் சுடுகாடகிக்கொண்டிருக்கிறது எங்களின் இழினிலை போக்க உதவிக் கரம் தாருங்கள், உங்களின் வாயிலாக எங்களுக்கு ஒருமித்த குரல் தாருங்கள், மரணத்தை நோக்கி வெகு வேகமாக பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு மாவட்டத்து மக்களை காப்பாற்றுங்கள்  இது ஒரு தனிமனித குரலல்ல, ஒட்டுமொத்த மாவட்டத்தின் குரலாக கருதுங்கள்.
ஒட்டு மொத்த கடலூர் மாவட்ட மக்களின் சார்பாக. நன்றி!

Thursday 10 February, 2011

காதல்...




பிரவீணா! பிரவீணா! ஏய் பிரவீணா! அங்கே அப்படி என்னதாண்டி பன்னுறே, கூப்பிடறது காதிலே விழல கிச்சனிலிருந்து அபிராமி கத்தினாள், கவர்மெண்ட் கொடுத்த இலவச கலர் டி.வி யில் ரஜினியின் சிவாஜி பட பாடலை ரசித்துக்கொண்டிருந்த பிரவீணாவுக்கு அபிராமியின் கத்தல் காதில் விழவில்லை.
டி.வி யில் ஸ்ரேயா ஆம்பள் ஆம்பள் பாடலுக்கு இடுப்பை வளைத்து வளைத்து ஆடிக்கொண்டிருந்தாள் அதனை ரசித்துக்கொண்டிருந்த பிரவீணாவின் முதுகில் ஒரு அடி விழுந்தது பதறி திரும்பியவள் அபிராமியை கண்டு சினுங்கினாள், என்னம்மா!
ஏண்டி எவ்வளவு நேரமாய் கத்திக்கொண்டிருக்கிறேன் உனக்கு டி.வி கேக்குதா? அங்கே எவ்வளவு வேலை கிடக்குது.
போடி போய் அந்த சீடையை டின்னில் அடைச்சு வை, வாணலில் இருக்கும் எண்னெய்யை எடுத்து ஆறிடுச்சான்னு பார்த்து கேனில் ஊற்றி வை  என மகளை விரட்டினாள் அபிராமி,


ம்கூம் .. கொஞ்ச நேரம் டீ. வி பார்க்க விட மாட்டியே! என முனங்கியவாறு சமயலறைக்கு போனாள் பிரவீணா.
நடந்து போகும் மகளையே பார்த்தவாறு  நின்ற அபிராமிக்கு நினைவுகள் பின் நோக்கி சென்றது.


பிரவீணாவிற்க்கு இரண்டு வயது இருக்கும்  அபிராமியின் கணவன் வேறு ஒரு பெண்னுடன் ஊரை விட்டே போய்விட்டான், நிர்க்கதியாய் நின்ற அபிராமிக்கு அவள் தம்பி வாசு தான் ஆதரவாய் நின்று ஒரு ஆம்பிளையாக அவளையும் குழந்தையாய் இருந்த பிரவீணாவையும் காப்பற்றினான் அவர்களுக்காக அவன் படிப்பையும் பாதியிலேயே விட்டு விட்டு சிறு வயதிலேயே வேலைக்கு போய் இருவரையும் காப்பாற்றினான். 


மேலும் எதிர்க்காலத்தை எண்ணி அதிக வருமானமும் வேண்டி கிராமத்திலிருந்து பக்கத்து நகரமான நெய்வேலிக்கு ஒரு பழைய ஓட்டு  வீட்டில் குடி பெயர்ந்தார்கள்.
வீடு பழையதாக இருந்தாலும் கடைத்தெரு பகுதியில் இருந்தது வருமானத்திற்க்கு வழி தேடியபோது முறுக்கு, சீடை வியாபாரம் செய்யலாம் என வாசு சொன்னான் அதன்படியே சிறிய முதலுடன் தொடங்கிய வியாபாரம் இன்று நல்ல வருமானம் தரும் தொழிலாக மாறியிருந்தது. கிராமத்தில் பத்தாவது வரை முடித்திருந்த ப்ரவீணா நெய்வேலி வந்து பன்னிரண்டாவது வரை முடித்திருந்தாள்.
அபிராமி சீடை, முறுக்கு தயாரிப்பதும் வாசு அதனை கடைகளுக்கு கொண்டு போய் போடுவதுமாக வியாபாரம் நன்றாக போய்க்கொண்டிருந்தது. பிரவீணா பன்னிரண்டாவது முடித்ததும் காலேஜுக்கு போக விரும்பினாள் ஆனால் அபிராமி வசதியை க்காரணம் காட்டி தடுத்து விட்டாள், பிரவீணாவின் படிப்புக்கு அபிராமி தடையாக இருப்பது பிரவீணாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.


அவள் எண்ணங்கள் ஆடம்பர வாழ்க்கையை நாடியது நன்றாக படித்து நல்ல படித்தவனாக பார்த்து திருமணம் செய்துக்கொள்ள விரும்பினாள் பிரவீணா, 
பிரவீணாவை பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும், நல்ல உயரம், சிவந்த நிறம், எடுப்பான, எளிதில் எவரையும் கவரும் அழகு, துறு துறுவென மேயும் மீன்களை போன்ற கண்கள், எடுப்பான மார்பகங்கள், குருகிய இடுப்பு, கருமையாக  பின்னழகோடு உறவாடும் நீண்ட கருங்கூந்தல் என பார்ப்பவரை  பெருமூச்சுவிட வைக்கும் அழகு.


அந்த அழகுதான் அபிராமி வயிற்றில் புளியை கரைத்தது, காலேஜுக்கு படிக்க போனால் ஏதாவது காதல் என மாட்டிக்கொள்வாலோ என பயந்து தொலைத்தாள் அதனாலேயே அவள் படிப்புக்கு முற்று புள்ளி வைத்துவிட்டாள், மேலும்  பிரவிணாவுக்கு வாசுவை திருமணம் செய்துவைத்துவிட வெண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தாள் அபிராமி.


தன் குடும்பத்தை சிறு வயதிலிருந்தே சுமந்துவரும் தன் தம்பி தான் பிரவிணாவுக்கு சரியான பொருத்தம்  என முடிவு செய்திருந்தாள் அபிராமி மேலும் தன் தம்பிக்கு செய்யும் நன்றிக்கடனாகவும் நினைத்தாள். 


வாசுவுக்கு பிரவீணா மீது விருப்பம் இருந்தாலும் அவள் விருப்பமே அவனுக்கு முக்கியாகப் பட்டது விரும்பிய பெண்னை மனப்பதே வாழ்க்கைக்கு சந்தோஷம் தரும் என அவன் நம்பினான், மேலும் பிரவீணாவை விட அழகிலும் உயரத்திலும் குறைவாக இருக்கும் வாசு, அவளுக்கு சரியான பொருத்தம் இல்லை என்ற எண்னமும் அவனுக்கு இருந்தது.
அதனாலேயே அபிராமி கல்யாணப்பேச்சு எடுக்கும் போதெல்லாம் அதில் விருப்பம் இல்லாதவன் போல் காட்டிக்கொண்டான் வாசு, .இது அபிராமிக்கு சற்று ஏமாற்றம் தந்தாலும் அவள் மனம் சலைக்கவில்லை சரியான நேரம் பார்த்து க்காத்துக்கொண்டிருந்தாள்.


பிரவீணாவோ அபிராமியின் எண்ணங்களுக்கு நேர்மாறாக இருந்தாள் மாமா வாசு தன் குடும்பத்துக்காக எவ்வளவோ செய்த்திருந்தாலும் அதற்க்காக தனக்கு சற்றும் பொருத்தம் இல்லாத அவனை மணந்துக்கொள்வதில் அவளுக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை மேலும் அவளின் எண்ணங்கள் படிப்பின் மீது இருந்தது நன்றாக படித்து தன் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ளவே அவள் விரும்பினாள் அவள் தொடர்ந்து படிப்பதற்க்கு வாசுவும் ஆதரவு தெரிவித்தான் ஆனால் அபிராமி உருதியாக மறுத்துவிட்டாள், தபால் மூலமாகவாவது டிகிரி படிக்கவேண்டும் எண்பதில் ஆர்வமாக இருந்தாள்.


மேலும் தான் போய் கேட்டாள் அம்மா மறுத்துவிடுவாள் எனவே வாசு மாமா மூலமாக கேட்டு எப்படியாவது சம்மதம் வாங்கிவிடவேண்டும் என தனக்குள் ஐடியா செய்தாள் பிரவீணா.
பிரவிணா இதுவரை வாசுவிடம் எதுவும் கேட்டதில்லை படிப்புக்காக இன்று அவன் உதவியை நாடி வாசலில் காத்திருந்தாள், வாசலிலேயே பேசிவிட்டாள் அபிராமிக்கு தெரியாது  வீட்டினுள் வைத்து பேசினாள் அம்மா இடையில் புகுந்து தடுத்துவிடுவாள் என்ற பயம் பிரவிணாவுக்கு,


இரவு 7 மணி ஆகியும் வாசு வரவில்லை என்றைக்கும் 6 மணிக்கு வரும் வாசு ஏன் இன்று இப்படி படுத்துகிரான் என புலம்பினாள் மனதுக்குள், எதிர்வீட்டு மாடியில் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது யாரோ நடமாடிக்கொண்டிருந்தார்கள். 
பிரவிணாவின் நடவடிக்கை இன்று அபிராமிக்கு வித்தியாசமாக என்ன ஆச்சு இவளுக்கு என்றைக்கும்  ஆறு மணிக்கெல்லாம் டி.வி பார்க்க உட்க்கார்ந்து விடுபவள் மணி ஏழைத்தாண்டியும் உள்ளே வராமல் வாசலில் உட்க்கார்ந்து இருந்தாள்,
ஏய் பிரவீணா அங்கே என்ன செய்யறே என வாய் எடுத்தவள் வாசலில் வாசு வந்து நிற்பதும்  அவனோடு பிரவீணா ஏதோ ஆர்வமாய் பேசுவதையும் கண்டு மனது ஏதோ கணக்கு போட்டது மனதுக்குள் வேண்டினாள் பெருமாளே! நான் நினைச்சது மட்டும் நடந்துச்சுன்னா திருப்பதிக்கு நடந்தே வருவதாக வேண்டினாள்.
என்றைக்கும் இல்லாமல் இந்த நேரத்தில் பிரவிணா வாசலில் நிற்பதும் தன்னோடு பேசத்தான் காத்து நிற்கிறாள் என்றதும் ஆர்வமானான் வாசு.


என்ன பிரவிணா இந்த நேரத்தில வாசல்ல நிக்குறே! என்றான் வாசு
மாமா அது வந்து, உங்களால எனக்கு ஒரு உதவி ஆகனும் செய்வீங்களா! என கெஞ்சுவது போல் பிரவிணா கேட்க்கவும் தடுமாறி போனான், தன்னோடு பேசவே யோசிக்கும் தன் அக்கா மகள் இன்று தன்னிடம் வாசலில் நின்று உதவி கேட்கிறாள் என்றதும் அது எதுவாயினும் செய்துவிடுவது என முடிவு செய்தான்,
சொல்லு பிரவீணா என்ன செய்யனும், ஆர்வமானான் வாசு,


அம்மா காலேஜ் போய் படிக்க வேண்டாமுன்னு சொல்லிட்டா, அதனால கரஸ்ல அதாவது லட்டர் மூலமா  பி. காம் படிக்கலாம்னு, ஆசையாயிருக்கு அப்ளிகேஷன் போட இன்னும் ஒரு வாரம் தான் டைம் இருக்கு நீங்க எனக்காக அம்மாகிட்ட பேசினீங்கன்னா கண்டிப்பா அம்மா ஒத்துப்பா! ப்ளீஸ் மாமா கெஞ்சினாள் பிரவிணா,
கரஸ்லதானே பிரவீணா படிக்க போறே! கவலைபடாதே அம்மாகிட்டே நான் பேசறேன் கண்டிப்பா ஒத்துப்பா, அப்புறம் நானே நாளைக்கு அப்ளிகேஷன் வாங்கிட்டு வரேன் உடனே அப்ளை பண்ணிடலாம் சரியா என்றான்.
மலை போன்ற கஷ்டத்தை இவ்வளவு எளிமையாக வாசு திர்த்துவைப்பான் என பிரவிணா எண்ணவில்லை மனம் சந்தோஷத்தில் தடுமாறியது அம்மா ஒத்துப்பாளா மாமா என தயக்கத்துடன் கேட்டாள் பிரவீணா.


கவலைப்படாதே அதை நான் பார்த்துக்கிறேன் என்றான் வாசு.
என்றும் இல்லாமல் இன்று தன் தம்பியும், தன் மகளும் ஒன்றாய் பேசியபடி வருவதைப் பார்த்த அபிராமி மனதுக்குள் சந்தோஷப்பட்டாளும் அவர்கள் பேசிய விஷயம் என்ன என அறிவதில் ஆர்வமானாள்.
உள்ளே வந்த வாசு அக்கா பசிக்குது சாப்பாடு எடுத்து வை என்றவாறு பாத்ரூமை நோக்கி போனான்,


என்ன வாசு இன்னிக்கு இவ்வளவு லேட்டு என்றாள் அபிராமி, வார வசூலுக்கு போனேன் அங்கே லேட்டாயிடுச்சு, அபிராமி சமயலறயிருந்து  சாப்பாடு கொண்டு வரும் முன், பாய் விரித்து தண்ணீர் வைத்து சாப்பிடும் இடத்தை தயார் செய்து இருந்தாள்  பிரவீணா இது புதிதாக இருந்தாலும் அபிராமி காட்டிக்கொள்ளவில்லை. 
வாசு சாப்பிட அமர்ந்தான், பிரவீணா தன் ரூமிற்க்குள் போய் ஒரு புத்தகத்தை எடுத்து படிப்பது போல் அவர்கள் பேசுவதை கவனிக்க ஏதுவாக அமர்ந்து கொண்டாள்.
அக்கா நான் உன்கிட்டே ஒன்னு சொல்லனும், பிரவிணா தபால் மூலமாக மேற்க்கொண்டு படிக்க ஆசைபடுறா உன்கிட்டே நேரடியா கேட்க அவளுக்கு பயம், நம்ம குடும்பத்துலேயும் ஒரு டிகிரி படிச்சவா இருந்தா நமக்கும் நல்லது தானே,  காலேஜுக்கு போக வேண்டியதில்லை வீட்டிலிருந்தே படிக்கலாம் என்னக்கா சொல்லுறே! நேரடியாக விஷயத்துக்கு வந்தான் வாசு,


அடடே! இப்ப அவங்களுக்கு சிபாரிசுக்கு ஒரு ஆள் கேக்குதா என்ன என்றாள் அபிராமி நக்கலாக, 
இல்லக்கா, பிரவீணா ஆசைப்படுறா படிச்சுட்டு போகட்டுமே என இழுத்தான் வாசு,
அப்புறமென்ன ரெண்டு பேரும் வெளியில் நின்று  பேசி முடிவு செய்துவிட்டு இப்ப என்னை கேட்கிறிங்க, என பொய் கேபம் காட்டினாள் அபிராமி,
அக்கா அது வந்து எனக்காக விட்டு கொடுக்கா எந்த பிரச்சனையும் வராமல் நான் பார்த்துக்கேறேன். அவ ஆசைப்படி ஒரு பட்டதாரியா ஆகட்டுமே.
எனக்கென்ன வாசு எனக்கப்புறம் அவளுக்கு எல்லாமே நீதான், நீ ப்பார்த்து செஞ்சா சரி என்றாள் அபிராமி விட்டேத்தியாக, மேலும் அவள் மனதில் உள்ளதையும் வாசுவுக்கு இன்னொரு முறை உறுதி படுத்திவிட்ட சந்தோஷம் அவளுக்கு
அவர்கள் பேசுவதை காதி வங்கிய பிரவீணாவுக்கு அபிராமியின் பேச்சுக்கள் எரிச்சல் உண்டாக்கினாலும் தற்போது எதுவும் பேசாமல் இருப்பதே நல்லது என் நினைத்தாள்.
இல்லக்கா உன் சம்மதத்துடன் அவளை படிக்க அனுமதிச்சா போதும் இல்லேன்னா வேண்டாம் என்றான் வாசு, 


இதற்க்கு மேல் பிடிவாதம் பிடிப்பதில் அர்த்தம் இல்லை என புரிந்தது அபிராமிக்கு, மேலும் தம்பியின் ஆசையையும் நிறைவேறட்டுமே, என உணர்ந்தவள் சரி வாசு உன் விருப்பமே என் விருப்பம் என் விருப்பம் நீ பிரவிணாவை பற்றி இந்த அளவுக்கு அக்கறை எடுப்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம் உன் இஷ்டப்படியே எல்லாம் நல்லப்படியாக நடக்கட்டும்  என முடித்தவள், 


பிரவிணா என குரல் கொடுத்தாள் வாசுக்கு கேசரி எடுத்து வைக்க மறந்துவிட்டேன்  கிச்சன்ல இருக்கு எடுத்து வா என்றாள்!
பிரவிணா ஒன்றுமே தெரியாதவள் போல் கேசரியை கொண்டுவந்து வைத்தாள்
என்ன பிரவினா கீழே வைக்கிறே மாமனுக்கு கேசரியை தட்டில் போடு என்றாள் அபிராமி
பிரவினா வாசுவின் தட்டில் கேசரி எடுத்து வைத்தாள் போதும் பிரவிணா என்றான் வாசு.
இரு வாசு இன்னும் வைக்கவே இல்ல, நீ வை பிரவிணா என்றாள் அபிராமி,
பிரவிணாவுக்கு வாசுவை இவ்வாறு உபசரிப்பது புதிதாக இருந்தாலும் வேறு வழியின்றி இன்னொரு முறை கேசரியை எடுத்து வைத்து விட்டு உள்ளே போய் விட்டாள் யாரிடமும் எதுவும் பேசவில்லை.
நான் அப்படி எதுவும் பேசாமல் வந்து இருக்க கூடாது, ஒரு வேளை மாமா எதுவும் தப்பாக நினைக்கலாம், மனதுக்குள் வருத்தப்பட்டாள்,  பிரவினா.
வாசு சாப்பிட்டு முடித்துவிட்டு அவன் ரூமிற்க்கு போனான் அதற்க்கு முன் அபிராமியிடம் அக்கா பிரவிணாவின் பன்னிரன்டாவது பாஸ் பன்னின சர்டிபிகேட்டை எடுத்து வை தேவைப்படும் என்றான்.


சரி வாசு என்றாள் அபிராமி.


பிரவிணா, பிரவிணாவை கூப்பிட்டான் வாசு,
என்ன மாமா என்றாள் பிரவினா, நான் நாளைக்கு அப்பிளிகேஷன் வாங்கி வந்துடறேன் நாளை மறுநாள் அப்பிளிகேஷன் போட்டுடலாம்  நாள்  நல்லா இருக்கு என்றான் வாசு.


அம்மா உனக்கு இஷ்டமாம்மா என்றாள் பிரவிணா அபிராமியை  பார்த்து, எனக்கும் இஷ்டம்தான் பிரவிணா நல்லபடியா படிச்சு பட்டம் வாங்கு வாசு சொன்னது போல் நம் குடும்பத்திலும் ஒரு பட்டதாரி வரட்டுமே என்றாள் அபிராமி இருவரையும் பார்த்து புன் முறுவலுடன்,  


பிரவிணாவின் மனது குதுகலப்பட்டது, அப்பாடா ஒரு வழியா பிரச்சனை தீர்ந்தது மனதுக்குள் சந்தோஷப்பட்டாள் பிரவிணா, ஆனாலு இடை இடையே அபிராமி உள் அர்த்தத்துடன் பேசியது மனசுக்கு சங்கடத்தை உண்டாக்கியது என்ன அம்மா இவள் எதிலும் என் விருப்பம் முக்கியமில்லையா? என மனதுக்குள் புலம்பியவாறு தூங்கிபோனாள்.
வாசுவுக்கு அபிராமி சொன்னது சந்தோஷமாக இருந்தாலும் பிரவிணாவை போலவே வருத்தப்பட்டான், அபிராமி உள் அர்த்தத்துடன் பேசியதை எண்ணி, அதுவும் பிரவிணா காதில் விழுவது போல் பேசிவிட்டாள் அக்கா மனதுக்குள் வருத்தப்பட்டான், பிரவிணாவுக்கு புரிந்திருக்குமோ? என யோசித்தவாறு தூங்கிபோனான்.


பக்கத்து தெரு விநாயகர் கோயிலின் பஜனை பாடல்கள் அந்த அதி காலை நேரத்தில் மனதிற்க்கு இதமாய் ஒலித்துக்கொண்டிருந்தது.
பிரவிணா அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து தலையில் ஈர டவலுடன் வாசலில் கோளம்போடத் தொடங்கினாள், கோளம் போடுவது அவளுக்கு பிடித்த விஷயம்  கோளமாவு பொடியுடன் அரிசி மாவும் கலந்து கோளம் போடுவாள் எறும்பு முதலான சிறு உயிர்களுக்கு அது இரையாவதில் அவளுக்கு சிறு மகிழ்ச்சி.
பச்சைக் கலர் பாவடையில் தங்க நிற ஜரிகையில் ஓரம் வைத்து, அதற்க்கு மேட்ச்சாக பச்சைக் கலர் ஜாக்கெட்டும்,
வெள்ளை நிற தாவணியில் ஊதா பூக்கள் போட்டதுமாய் அவளை ஒரு தேவதையாக காட்சியளித்தது, பிரவிணா, அந்த அதிகாலை பொழுதில் கோளம் போடும் அழகை ரசிப்பதற்க்காகவே அந்த பிரம்மன் அவளை படைத்தானோ என் எண்ணத்தோன்றும் ரம்மிய காட்சியாக இருந்தது அவள் கோளம் போடும் அழகு


என்னா பிரவிணா சௌவுக்கியாமா என் குரல் கேட்டு நிமிர்ந்தாள் பிரவிணா,
எதிர் வீட்டு கோமளம் மாமி வாசலில் நின்று இருந்தாள்  புன்னகையோடு,
என்ன மாமி சவுக்கியமா! எப்போ ஊரிலிருந்து வந்தேள் என்றாள் பிரவிணா
ராத்தி தாண்டி ஊரிலிருந்து வந்தேன், நேத்தெல்லாம் பஸ்ல வந்தது உடம்பெல்லாம் ஒரே வலி செத்த என் வீட்டு வாசலிலும் கோளம் போடேண்டி என்றாள் கோமளம் மாமி, 


அதற்க்கென்ன மாமி இதோ வரேன்,  மாமி வீட்டு வசலுக்கு போய் கோளம் போடத்துவங்கினாள் பிரவிணா
உனக்கு என்ன கலை ஆர்வம்டி பிரவிணா என்ன ரம்மியமாய் கோளம் போடற.
ஐஸ் வைக்காதிங்கோ மாமி நான் தான் கோளம் போடறேனே! இல்லடி பிரவிணா நீ கோளம் போடற அழகை பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கு என்றாள் கோமளம் மாமி.
கோளம் போடுவதில் ஆர்வமானாள் பிரவிணா, மாமி வீட்டு வாசலில் கோளம் போட்டு முடித்துவிட்டு மீண்டும் அவள் வீட்டுவாசலில் பாதியில் விட்ட கோளத்தை போடத்துவங்கினாள் பிரவிணா.


மாமி அடுக்களையில் வேலை இருக்குன்னு உள்ளே போய்விட்டாள்.
நன்றாக மலர்ந்த செம்பருத்தி பூ, அதனுடன் இருமொட்டுக்கள், இலைகளுடன் கூடிய கோளத்தை போட்டுக்கொண்டிருந்தவளுக்கு ஏதோ ஒரு உணர்வு தன்னை யாரோ உற்றுனோக்குவது போல்
சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தாள் யாரும் இல்லை மீண்டும் கோளம் போடத்துவங்கினாள் மீண்டும் அதே உணர்வு யாரோ உற்றுனோக்குவது போல் சட்டென திரும்பாமல் சிறிது நிதானித்தாள் பிறகு சட்டென தலையை நிமித்தி மேலே பார்த்தாள் கோமளம் மாமி வீட்டு மாடியில் யாரோ ஓடி மறைவது போல் தெரிந்தது அதிகாலை பொழுதானதால் உருவம் சரியாக தெரியவில்லை ஆணாக இருக்க கூடுமோ அனுமானிக்க முயன்றாள் புலப்படவில்லை.


பிரவிணா! இன்னும் வாசலிலே என்ன பண்னுறே! அபிராமியின் குரல் விட்டுக்குள்ளேயிருந்து கேட்டது, இதோ வந்துட்டேன்மா கோளத்தை முடித்து விட்டு உள்ளே ஓடினாள் பிரவிணா.


அபிராமியுடன் அன்றைய வேலைகளில் ஈடுபட்ட பிரவிணா  காலையில் கோளம் போடும்பொழுது நடந்த சம்பவத்தை முழுவதுமாக மறந்து போனாள், வழக்கமாக தயாரிக்கும் சீடை, முறுக்கு போன்றவைகள் அன்று சற்று அதிகமாக தயாரிக்க வேண்டி இருந்ததால் வேலை அதிகமாக இருந்தது.
பிரவிணாவின் காலெஜ் அப்ளிகேஷன் வாங்கவும்  தனது அன்றாட வேலை தொடர்பாகவும் போன  வாசு மதியம் சாப்பாட்டுக்கு கூட வரவில்லை, மதிய வேலைகளை முடித்து விட்டு அபிராமி தூங்க போய்விட்டாள்.


பிரவிணா கையில் ஒரு புத்தகத்துடன் வீட்டு ஹாலில் உட்க்கார்ந்து படிக்க தொடங்கினாள், நேரம் கிடைக்கும்போதெல்லாம் வைரமுத்துவின் கவிதைகளையும் சில கதை புத்தகங்களையும் படிப்பது பிரவிணாவின் வழக்கம் படித்ததில் சில முக்கியமான கருத்துக்களையும் கவிதைகளையும் தனியாக குறிப்பெடுத்து வைப்பாள் அவ்வாறு அவள் படித்ததில் அவளை  க்கவர்ந்த வைரமுத்துவின் வரிகள் சில:
கொடியிலிருந்து மலர்கள் உதிர்கின்றன, மலர்கள் உதிர்ந்தது கொடிக்கு தெரியுமா தெரியாதா? அப்படி தெரிந்தால் கொடி மலரை உதிர விட்டிருக்குமா என்ற சந்தெகம் கவிஞனுக்கு,
சந்தேகத்துடன் வீதியில் உலா வருகிறான், அப்பொழுது ஒரு மனிதன் ஒரு குழந்தையை தூக்கியப்படி செல்கிறான் குழந்தை தூங்கியபடி செல்கிறது அதன் கையில் இருக்கும் பொம்மை நழுவி விழுகிறது அதனை கவனிக்கிறான் கவிஞன், கொடிகள் தூங்கிக் கொண்டிருக்கும்போது மலர்கள் உதிர்ந்து விழுகின்றது என்ற முடிவுக்கு வருகின்றான் கவிஞன், இதில் வைரமுத்துவின் கருத்து என்னவென்றால் '' நான் யார் நழுவவிடும் குழந்தையா இல்லை நழுவி விழும் பொம்மையா! இது போன்ற கருத்துக்களையும் கவிதைகளையும் படிப்பதில் பிரவிணாவுக்கு ஆர்வம் அதிகம்.
கவிதையில் ஆழ்ந்து போயிருந்த பிரவிணாவுக்கு வாசலில் யாரோ வருவது போன்ற சப்தத்தில் கலைந்தாள், வாசுதான் உள்ளே வந்தான்  என்ன பிரவிணா சாப்பிட்டாச்சா என விசாரித்தப்படி அவன் ரூமிர்க்கு போனான்


ஆங் .. ஆச்சு மாமா என்றபடி அபிராமியை போய் எழுப்பினாள் பிரவிணா அம்மா மாமா வந்தாச்சு உனக்கும் சேர்த்து சாப்பாடு வைக்கவா! 
 இல்ல பிரவிணா எனக்கு சாப்பாடு வேண்டாம், நேரமாயிடுச்சல்ல, மாமாவுக்கு நீயே சாப்பாடு போட்டுக் கொடு
என்றபடி மறுபடியும் தூங்கதொடங்கினாள் அபிராமி.
பிரவிணா வாசுவுக்கு சாப்பாடு வைக்க சாப்பிடும் இடத்தை தயார் செய்தாள்
என்ன செய்யற பிரவிணா   என்றபடி பாத்ருமிலிருந்து வந்தான் வாசு.   
உங்களுக்கு சாப்பாடு வைக்க தயார் செய்யறேன் மாமா என்றாள் பிரவிணா வேண்டாம் பிரவிணா நேரமானதால நான் வெளியிலேயே சாப்பிட்டு வந்துட்டேன், நி போய் உன் வேலையை பாரும்மா என்றான் வாசு


சரி மாமா சூடா காபி எதாவது தரட்டுமா என்றாள் பிரவிணா


இப்ப வேண்டாம் பிரவிணா கொஞ்சம் நேரம் போகட்டும், ஆமா அக்கா எங்கே என்றான் வாசு, அம்மா தூங்குறா! எழுப்பட்டுமா மாமா என்றாள் பிரவிணா 
வேண்டாம் தூங்கட்டும் அப்புறமா பேசிக்கிறேன்


என்றபடி வாசு அவன் ரூமிற்க்கு போனான், பிரவிணா மாமா என இடை மறித்தாள்.
என்ன பிரவிணா என திரும்பினான் வாசு அப்ளிகேஷன் வாங்கிட்டுவந்தீங்களா! மாமா என்றாள் பிரவிணா
 அது வந்து பிரவிணா இன்னிக்கு அப்ளிகேஷன் வாங்க முடியல ஏன்னா நேத்தோட அப்ளிகேஷன் இஸ்யு பண்ணுற தேதி முடிஞ்சுட்டுன்னு  அந்த காலேஜ்ல சொல்லிட்டா அதனால எனக்கு தெரிஞ்சவா மூலமா கேட்டிருக்கேன் நாளைக்கு கண்டிப்பா வாங்கிட்டு வந்துடறேன் பிரவிணா என்றான்.


அவன் முகத்தில் சங்கடம் தெரிந்தது மேலும் அதில் ஏமாற்றமும் பிரதிபலித்தது,
பிரவிணாவுக்கு அவன் சொன்னது ஏமாற்றம் அளித்தாலும்  அவளுக்கு கண்டிப்பாக அப்ளிகேஷன் கிடைக்கும் என்ற நம்பிக்கை   இருந்தது, இருப்பினும் தனது நம்பிக்கையை உறுதி படுத்த  நளைக்கு கண்டிப்பாக கிடைச்சுடுமா மாமா என்றாள்,
கண்டிப்பாக கிடைக்கும் பிரவிணா என்றான் வாசு
பிரவிணாவுக்கு மனதில் கவலை தொற்றிக்கொண்டது நாளை அப்ளிகேஷன் கிடைக்கவேண்டுமே பெருமாளே கண் மூடி வேண்டினாள்.  


பக்கத்து தெரு விநாயகர் கோயிலில் இன்று வழக்கத்துக்கு மாறாக பஜனை பாடல்கள் நல்ல சத்தமாக ஒலித்துக்கொண்டிருந்தது அந்த அதிகாலை வேளையில் தெய்வபக்தியான பாடல்கள் நல்ல மனனிலையை தருவதாக இருந்தது பிரவினாவுக்கு, அந்த காலை வேளையில் பஜனை பாடல்களை கேட்டுக்கொண்டே கோளம் போடுவதில் அலாதி பிரியம் பிரவிணாவுக்கு.


வழக்கம்போல் கோளம் போட  வாசலுக்கு வந்தாள்  பிரவிணா தண்ணீர் தெளித்து கோளம் போட அமர்ந்தவள் தன் முன்னே ஏதோ கவர் போலவும் அதன் மேல் சிவப்பாக ஏதோ இருப்பதைக் கண்டு ஒரு நொடி நிதானித்தாள் ஒரு காகித கவரும் அதன் மீது ஒரு ரோஜாவும் வைக்கப்பட்டு இருந்தது.


 அதனை கையில் எடுத்தாள் அன்று மலர்ந்தது போல் ப்ரெஷ்ஷாக இருந்தது அந்த ரோஜா, அதனோடு சேர்ந்த அந்த கவரை ப்பார்த்தாள் அதில் அழகான எழுத்துக்களில் '' என் முற்றத்து நிலவுக்கு '' உன் ரசிகனின் அன்பு பரிசு என எழுதப்பட்டிருந்தது
ஒரு கணம் தடுமாறியவள், சுற்றும் முற்றும் பார்த்தாள் யாரும் இல்லை, சட்டென நேற்றுக் காலை நடந்த விஷயங்கள் ஞாபகத்துக்கு வந்தது, நேர்றுக்காலை கோளம் போடும் பொழுது யாரோ உற்று பார்ப்பது போல் இருந்ததும் கோமளம் மாமி விட்டு மாடியில் யாரோ மறைந்ததும் பளிச்சென கண் முன் தோன்றியது.


சட்டென தலையை நிமிர்த்தி கோமளம் மாமி வீட்டு மாடியை பார்த்தாள் அங்கு யாரும் இல்லை மாடியில் விளக்கில்லாமல் இருட்டாக இருந்தது. மீண்டும் அந்த கவரையே பார்த்தாள் அழகான எழுத்துக்களில் மீண்டும் அந்த வரிகள் மீண்டும் அவளிடம் தடுமாற்றம்.


கவரின் உள்ளே ஏதோ இருப்பது போல் தோன்றியது, கவரினை பிரித்து உள்ளே பார்த்தாள் அதில் சில பேப்பர்கள் மடித்து வைக்கப்பட்டு இருந்தது அந்த பேப்பரை பிரித்தாள் அவள் அழகிய விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது.
அந்த பேப்பர் பி.காம் தபால் மூலம் படிப்பதற்க்கான அப்ளிகேஷன் இருந்தது அத்துடன் ஒரு கடிதமும் வைக்கப்பட்டிருந்தது அந்த கடிதத்தை விரல் நடுங்க பிரித்தாள்,


பிரவிணா இன்னும் அங்கே என்ன செய்யறே அபிராமி உள்ளேயிருந்து கத்தினாள் அவசரத்தில் உள்ளே ஓடினாள் பிரவிணா கையில் இருந்த கவரையும் ரோஜாவையும் ஹாலில் வைத்துவிட்டு அபிராமியை நோக்கி போனாள், போவதற்க்கு முன் சட்டென உரைத்தது கவரையும் ரோஜாவையும் யாராவது பார்த்துவிட்டால் மீண்டும் அதனை எடுத்து அவள் படுக்கை அறையில் கொண்டு போய் மறைத்து வைத்தாள்,
ஹாலுக்கு வந்து இதோ வந்துட்டேன்மா என்றபடி சமையல்  அறைக்கு போனாள்,
ஏண்டி பிரவிணா நான் ஒருத்தி இங்கே தனியா கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன் நீ அங்கே என்ன செய்யறே என்றாள்,


இல்லம்மா கோளம் போடலாமுன்னு போனேன், என இழுத்தாள் பிரவிணா
இன்னும் கோளம் போடலியா இவ்வளவு நேரம் அங்கே என்ன செய்துகிட்டு இருந்தே! 
சிடுசிடுத்தாள்  அபிராமி


இல்லம்மா அது வந்து தடுமாறினாள் பிரவிணா,


சரி சரி மச மச வென நிக்காதே இந்த வென்னீரை கொண்டு போய் பாத்ரூமில் வை  நான் குளிச்சிட்டு வந்துடறேன், என்றாள் அபிராமி.
வென்னீரை பாத்ரூமிற்க்கு கொண்டு போனாள் பிரவிணா அபிராமி குளிக்கப் போனாள். 
வாசலுக்கு போய் வேகமாக பெயருக்கு ஒரு கோளத்தை போடு முடித்தாள் பிரவிணா எண்ணங்கள் அந்த கவரின் மீதே இருந்தது, வேகமாக உள்ளே வந்து தன் அறைக்கு போய் கதவை சாத்தினாள்
அந்த கவரை எடுத்தாள் அதன் உள்ளே இருந்த லட்டரை எடுத்து பிரித்தாள்
கவரின் மேலே உள்ளது போல் ஆழகான வரிகளாக மிக நீண்ட கவிதையாக இருந்தது கை நடுங்கியது பிரவிணாவுக்கு ரூம் கதவை திறந்து அபிராமி பாத்ரூமில் இருப்பதை இன்னொரு முறை உறுதி படுத்திக்கொண்டாள்.


மீண்டும் கதவை சாத்திவிட்டு கவிதை வரிகளின் மேல் தன் பார்வையை பதித்தாள் படிப்பதற்க்குமுன் உள்ளுணர்வு எச்சரித்தது இது அடுத்தவருக்கான லட்டராக இருந்தால் படிப்பது தவறல்லவா, யோசித்தாள்! லட்டரோடு இருந்த பி.காம் அப்ளிகேஷன் இது அடுத்தவருக்கான லட்டர் இல்லை என உறுதி செய்த்தது.


மீண்டும் கவிதை வரிகளை படிக்கத் தொடங்கினாள்:


இது வரை கண்டதில்லை எங்கும்
வண்ண மலர் ஒன்று மலர் 
வரைந்த அற்புதம்!


உன் விட்டு வாசலில் பூத்த
செம்பருத்தி பூ என் இதயத் 
தோட்டத்திலும்  மலர்ந்ததோ!
காதல் பூவாக!


அதிகாலை சூரியனும் ஒரு
நிமிடம் ஸ்தம்பித்து தான்
போனது உன் கலையழகை
கண்டு விட்டு!


மலருக்கு உருவம் தந்த மலரே
என் இதய தோட்டத்தில் பதியம் 
போட்ட உன் உருவத்திற்க்கு 
காதல் தோட்ட மலராக
உருவம் தருவாயோ!


மலரட்டும் உன் வாசலில் மலர்கள்
மாலையிலும், காலையில் உனைக்
கண்டு கண் விழிக்கும் சூரியன்
மாலையிலும் கண்ணுறங்கட்டும் உன் 
காதல் நினைவுகளோடு!


மாலையிலும் நீ மலர காத்திருக்கும் உன் ரசிகன்!...


குறிப்பு: வீட்டு மலரே! நீ கல்லூரி தோட்டத்திலும் மலரவே இத்துடன் இணைத்துள்ள பி.காம் அப்ளிகேஷன் பயன்படுத்திக்கொள்வாய் என்பதே இந்த ரசிகனின் விருப்பம்.


என முடிந்தது அந்த லட்டர்.
காதல்... தொடரும்.

Sunday 30 January, 2011

வல்லமை



அந்த பிளாட்பார்ம்! சிதிலமடைந்த பென்ஞ்சுக்கள், ஒரு நாளைக்கு இரு முறை மட்டும் வந்து செல்லும் இரயில் வண்டிகள் பிரிட்டிஷ் காலத்தை நினைவூட்டும் அதன் தோற்றம் அதனை உரிமையாக கொண்ட அந்த ரயில்வே ஸ்டேஷன்!!
ஓங்கி வளர்ந்த ஒரு வேப்ப மரம் அந்த ஸ்டேஷனுக்கு வருபவர்களுக்கு இலவச ஏசியாய் தனது பணியை செவ்வனே செய்தது. 

அந்த வேப்ப மரத்தை யொட்டினாற் போல் ஒரு சிறிய பெட்டிக்கடை அது மட்டுமே அந்த ஸ்டேஷனுக்கு வருவோரின் தேவைகளையும், வரும் ரயில் பயணிகளின் தேவைகளையும் தீர்க்க ஒரே ஒரு வாய்ப்பு.

குமுதம், ஆனந்த விகடன், தினத்தந்தி, தினமலர் முதலிய பத்திரிக்கைகளும், கேக், பிஸ்கட், மிட்டாய் வகைகள் மற்றும் லெமன், தயிர் சாத வகைகள் அந்த பெட்டிக்கடையின் அன்றாட வியாபார மூலதனங்கள், ஒரு நாளைக்கு இருமுறை மட்டுமே ரயில் வரும் என்றாலும் ஒவ்வொரு முறையும் ப்தினைந்து நிமிடங்கள் நிற்க்கும் அந்த ரயில்.

கிடைக்கின்ற சொற்ப நேரத்தில் சதூர்யமாக வியாபாரம் செய்வதில் பெட்டிக்கடை மனியண் கில்லாடி.

காலை 11.30 க்கு ஒரு முறை மாலை 5.30 க்கு ஒரு முறை வரும் அந்த ரயில். அந்த நேரங்களில் பெட்டிக்கடை மனியண் பம்பரமாக சுழலூவான்.
கிடைக்கின்ற இரு சந்த்ர்ப்பத்திலும் குறைந்தது 500 அல்லது 600 ரூபாய் வியாபாரம் செய்துவிடும் சாமர்த்தியம் அவனுக்கு.
ஆனால் அவனுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை பிச்சைக்காரன் இருளப்பன். 
நெடுநெடு உயரம், ஒடுங்கிய உடல்வாகு, பல வருடங்களாக எண்ணெய் பாராத சடை பிடித்த தலை கேசம், தாடி, உடை எனும் பெயரில் கிழிந்த கோவன துண்டு, அழுக்கு உடலுமாய் விகாரமாய் காட்சி தரும் இருளப்பன்.

இருளப்பன் தின்றதில் மிச்ச்த்தை உண்டு வாழுமொரு கருப்பு நாயும் அந்த ஸ்டெஷனையே சுற்றி வந்தது இருளப்பன் போலவே எழும்பும் தோலுமாய்.

பயணிகள் மணியண் கடைக்கு வரும் போதெல்லாம் அவர்களை அனுகி பிச்சை கேட்ப்பது இருளனின் வாடிக்கை. இதனால் சில நேரங்களில் பயணிகள் தொந்தரவுக்கு ஆளாவதும் அதனால் மனியணின் வியாபாரம் பாதிக்கப்படுவதும் வாடிக்கை.

இதனால் இவர்கள் இருவருக்கும் பிரச்சனை வருவதும் அதனை ஸ்டேஷன் மாஸ்டர் சதாசிவம் வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கை.

கடந்த இரண்டு நாட்களாக வழக்கமாக வரும் ரயில்கள் வரவில்லை தண்டவாளத்தில் ஏதோ பிரச்சனை என்றார்கள் இதனால் மணியணின் வியபாரமும், இருளப்பனின் வ்ருமானமும் பாதிக்கப்பட்டது.

இன்று கண்டிப்பாக வண்டி வரும் என ஸ்டேஷன் மாஸ்டர் சதாசிவம் சொன்னார் அந்த நம்பிக்கையில் எப்படியாவது விட்ட இரண்டு நாள் வருமானத்தையும் சம்பாதித்து விட வேண்டும் என மணியண் தயாராக இருந்தான்.
ஸ்டேஷன் மாஸ்டருடன் மணியண் பேசுவதை கேட்ட பிச்சைக்காரனும் தன் பங்குக்கு தயரானான் மேலும் இரண்டு நாள் பட்டினி அவனை மேலும் உசுப்பியது.
அந்த கருப்பு நாயும் இரண்டு நாட்களாக சாப்பிட ஏதும் கிடைக்காததால் பிச்சைக்காரன் ஏதேனும் போட மாட்டானா யென அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தது.
சிறிது நேரத்திற்க்கெல்லாம் 11.30 க்கு வரும் ரயில் வந்தது மணியண் பரப்பரப்பானான் கடையில் கூட்டம் கூடியது.

பயணி ஒருவர் மணியண் கடையில் கேக் வாங்கினார் இதனை கண்ட பிச்சைக்காரன் ஆர்வமானான் அந்த பயணியை நோக்கி கையை நீட்டி கேக் கேட்டான் கெஞ்சலாக, 
பயணியின் பார்வையில் எரிச்சல் இருந்தது, பிச்சைக்காரனின் தோற்றமும் அவனிடமிருந்து வரும் துர்நாற்றமும் மேலும் அவரை எரிச்சல்படுத்தியது தூரப்போடா என கையை தூக்கி விரட்டினார் பிச்சைக்காரனை,
அசரவில்லை பிச்சைக்காரன், அவர் விரட்டலுக்கு பயப்படுவ்துபோல் நடித்து மீண்டும் அவரை நெருங்கினான்.

ஐயா! ரெண்டு நாளா சாப்பிடல எதாவது கொடுங்கய்யா! கையேந்தி நெருங்கினான்.

கடைக்கார மணியண் கோபமானான் பிச்சைக்காரனை திட்டினான் போடா என விரட்டினான், பிச்சைக்காரன் மணியனை முறைத்தான் ஆனால் அங்கிருந்து நகரவில்லை.

பிச்சைக்காரன் மீண்டும் பயனியை நெருங்கி ஐயா! என்றான். பயணி மீண்டும் எரிச்சலானார் போடா என பிச்சைக்காரனை நோக்கி கையை ஓங்கினார், பயந்து பின் வாங்கிய பிச்சைக்காரன், ஏதாவது கிடைக்குமா என்ற நோக்கத்துடன் அவன் காலையே சுற்றி வந்த கருப்பு நாயை மிதித்து விட்டான், மிதிப்பட்ட வலியினால் ஆக்ரோஷமாக குரைத்த நாய் பிச்சைக்காரனை நோக்கி கடிக்க பாய்ந்தது.
பதறிய பிச்சைக்காரன், அதனை அடிபபது போல் பாவனை செய்ய , நாய் தூரமாக ஓடிபோய் அவனை பார்த்து குரைத்தது. அதனை சட்டை செய்யாத பிச்சைக்காரன் மீண்டும் அதே பயணியை நெருங்கினான் அதற்க்குள் அந்த பயணி வந்த ரயில் புறப்பட தொடங்கியது பயணி அவசரமானார் கையில் கேக்குடன் ரயிலை நோக்கி நடந்தார் பிச்சைக்காரன் இடைமறித்து ஐயா! என்றான் கெஞ்சலாக,
பயணி அவசரமானார் பிச்சைக்காரனிடமிருந்து தப்பிக்க சீக்கிரம் ரயிலில் ஏறுவதே சரியென ப்பட்டது அவருக்கு. ரயிலும் நகர தொடங்கியது, பயணி ஓடிப்போய் ரயிலில் ஏறினார். ஓடும்பொழுது அவர் கையிலிருந்து ஒரு கேக் நழுவி விழுந்தது அந்த கேக்கினை எடுக்க எத்தனிததவர் அவகாசம் இல்லாததால் அதனை விட்டுவிட்டு ரயிலில் ஏறினார். அவர் பின்னாலேயே ஓடிய பிச்சைக்காரன் கீழே விழுந்த கேக்கினை க்கண்டு பரவசமானான்.

அந்த கேக்கினை பிச்சைக்காரன் எடுக்க எத்தனிப்பதை கண்ட ரயில் பயணியின் முகத்தில் ஏமாற்றம் எதிரொலித்தது.

பிச்சைக்காரன் அந்த கேக்கினை எடுப்பதற்க்கு முன் ஆக்ரோஷ குறைப்புடன் கருப்பு நாய் இடையில் புகுந்தது கடுப்பானான் பிச்சைக்காரன், நாயினை விரட்ட கையை ஓங்கினான் நாய் அசரவில்லை கேக்கினை கவ்வ பாய்ந்தது வழக்கதுக்கு மாறாக அதன் ஆக்ரோஷம் அதிகமாக இருந்தது, கடித்துவிடுமோ என்ற பயம் இருந்தாலும் துணிந்து கேக்கினை எடுத்தான் பிச்சைக்காரன், ஆனால் நாய் ஆவேசமாக அவனை நோக்கி பாய்ந்தது பயத்தில் பதறிய பிச்சைக்காரன் தடுமாறி கீழே விழுந்தான், அவன் கையிலிருந்த கேக்கும் காலியாக இருந்த தண்டவாளத்தில் போய் விழுந்தது.

கீழே விழுந்த பிச்சைக்காரன் சுதாரிப்பதற்க்குள் நாய் தண்டவாளத்தில் விழுந்த கேக்கினை கவ்விக்கொண்டு ஓடியது, சுதாரித்த பிச்சைக்காரன் நாயை விரட்ட எத்தனித்தான் ஆனால் நாய் அதற்க்குள் கேக்குடன் ஓடி மறைந்தது.
கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயத்தினை தடவிக்கொண்டே பிச்சைக்காரன் சோர்வாக வேப்பமரத்தினடியில் போய் அமர்ந்தான்.

இதனை பார்த்துக்கொண்டிருந்த பெட்டிக்கடை மனியன் நக்கலாக சிரித்தான் பிச்சைக்காரனை ப்பார்த்து, அப்பொழுது தான் மணியனுக்கு ஞாபகம் வந்தது கேக் வாங்கிய பயணி கேக்குக்கு காசு தரவில்லை என்பது

Saturday 29 January, 2011

வளைகுடா நாடுகள்: சவுதி அரேபியா


தட்பவெப்ப நிலை வேறுபாடுகளினால் ஏற்ப்படும் பாதிப்புகள்  மழை வளங்கள் குறைவு, வெப்ப நிலை அளவுகளின் ஏற்றத் தாழ்வுகள், கால நிலை தவறி பெய்யும் மழை இதுபோன்ற காரணங்கள் மனித வாழ்க்கைக்கு மிகப்பெரிய சவால்களை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருக்கின்றன எத்தனை அதிவேகத்தின் விஞ்ஞான வளர்ச்சிகள் இருந்தாலும் இயற்க்கையின் சீற்றத்துக்கு முன் அவை பின்னடந்ததாகவே உள்ளன மேலும் அவை அத்தனையும் இயற்க்கைக்கு எதிராகவே அமைந்துவிடுகின்றன.

வளைகுடா நாடுகளை பொருத்தவரை அதாவது பாலைவன நாடுகளை பொருத்தவரை, மழைவளம் மிகக்குறைவு, வெப்பம் மிகுந்த நாடுகள் என்ற பொதுவான ஒரு கண்ணோட்டம் உண்டு வருடத்திற்க்கு ஒருமுறை மழை பெய்வதே கடினம், அனல் காற்றும், மணல் புயலும் அடிக்கடி ஏற்ப்படக்கூடிய இயற்க்கை சூழலைக் கொண்ட நாடுகள் அவை, எண்ணெய் வளம் மிகுந்த நாடுகள் செல்வம் கொழிக்கக் கூடிய நாடுகள் அதனால் அதன் தொழில் நுட்பங்கள், கட்டுமானங்கள், பொருளாதார வளர்ச்சிகள் அனைத்திலும் அபரித வளர்ச்சி கண்டுவரும் நாடுகள் அவை. பெரும்பாலனோர் வருமானத்திற்க்காக வளைகுடா நாடுகளை நோக்கி பயணிக்கும் அளவுக்கு, அயல்னாட்டு தொழிலாளர்களை பயன்படுத்தி வளர்ச்சி கண்டுவரும் நாடுகள் வளைகுடா நாடுகள்.

விண்ணைமுட்டும் கட்டிடங்கள், பெரிய பெரிய தொழிற்சாலைகள், ஆடம்பர வீடுகள்  என கட்டிடக்கலையில், அயல்னாட்டு வல்லுனர்களை பயன்படுத்தி அபரித வளர்ச்சி கண்டிருந்தாலும்  சமிப காலங்களாக இயற்க்கை சீற்றங்களினால் ஏற்ப்படும் பாதிப்புகள் வளைகுடா நாடுகளின் கட்டிடக்கலையின் பின்னடைவை உணர்த்தியுள்ளன, சமீப காலங்களில் இந்த வளைகுடா நாடுகளில் பெய்ந்து வரும் மழை, அன்னாட்டு  நகர அமைப்பிலும் கட்டிடக் கலையிலும் உள்ள பின்னடைவை மிக அழகாக எடுத்துக் காட்டியுள்ளது.

சில தினங்களுக்கு முன் சவுதி அரேபியாவின் முக்கிய நகரமான ஜித்தா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக மிகப் பெரிய பாதிப்புகளை சந்தித்தது அந்நகரம், சாலைகளும், தொழிற்சாலை பகுதிகளும், வீடுகளுள்ள பகுதிகளும் வெள்ளக்காடானது, மழையினால் பெருக்கெடுத்த வெள்ள நீர் வடிய தேவையான வடிகால் வசதிகள் இல்லாத காரணத்தால் மழை நீர் அங்கங்கே தேங்கியது நகரம் முழுவதுமே வெள்ளக்காடானது இதனால் எண்ணற்ற விபத்துக்கள், மக்களின் இயல்பு வாழ்க்கை மிகப் பெரியளவில் பாதிக்கப்பட்டது, வாகனங்கள் நீரில் முழ்கின. வெள்ள நீர் ஒரு ஆள் முழ்கும் அளவுக்கு மேலாக தேங்கியிருந்தது இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை, வெளியே சென்றவர்கள் திரும்ப வீடு வந்து சேர இயலானிலை. முறையற்ற கட்டிட கட்டமைப்புகளும் போதிய வடிகால் வசதியின்மையும் இதற்க்கு முக்கிய காரணங்கள், சவுதி அரேபியாவில் மழையே பெய்யாது என்ற நோக்கத்தில் நகரின் அமைப்பை உறுவக்கினார்களோ என எண்ணத் தோன்றுகிறது, இது போன்ற மற்றுமொரு அனுபவம் அந்நகரருக்கு கடந்த ஆண்டு கிடைத்தது அப்பொழுது பெய்த கடும் மழையில் நூற்றுக்கு மேலானோர் உயிரிழந்தனர் அந்த பாதிப்பிற்க்கு பின்பும் அந்நகரின் கட்டிடக் கலையிலும் நகர அமைப்பிலும் எந்தவித மாற்றமும் இல்லை அதன் விளைவே சில தினங்களுக்கு முன் பெய்த மழையிலும் கடுமையான் பாதிப்பை சந்திதுள்ளது.

வயோதிகச் சுமைகள்


உச்சி வெயில் மண்டையை பிளந்தது, நாக்கு தண்ணீர் கேட்டு தடித்தது, கால்கள் தடுமாறின பக்கத்தில் இருந்த சுவற்றை பிடித்தவாறு  சற்று ஆசுவாசப்படுத்தினார் குமரய்யா.
குமரய்யா வயது 60 தை தாண்டிய முதுமைப்பருவம், கசங்கி அழுக்கேறிய சட்டையும் வேட்டியும், வாடிய முகமும், தள்ளாடிய நடையும் ஒருவாரகாலமாக வீதியை தனது சொந்தமாக்கிக் கொண்ட நிலையியை வெளிச்சம் போட்டுக்காட்டியது.
தூரத்தில் தெரிந்த அந்த வேப்பமரத்தை அவரது கண்கள் ஆவலாக நோக்கின அதன் நிழல் தரும் சுகம் அவருக்கு சொர்க்கத்தை நினைவுப்படுத்தியது எப்படியாவது அந்த மரத்துகருகில் போய்விட வேண்டும் உடல் தளர்ந்து இருந்தாலும் மனசு உந்தியது.
காடுகள் எல்லாம் கான்கிரிட் காடுகளாய் உருமாறிக்கொன்டிருக்கும் இந்தக் காலத்தில் யாரோ புண்னியவான் தன் வீட்டு வாசலில் வேப்பமரத்தை வளர்த்திருந்தார், பசியாலும் தாகத்தாலும் தளர்ந்து போன உடல் அறுபது வயது முதுமை வேறு இயலாமைக்கு சொல்ல்வா வேண்டும். அந்த மரத்துக்கருகில் போகும் நோக்கத்துடன் தளர்ந்த நடையுடன் ஒரு அடிமுன் வைத்தார் முன்னெச்சரிக்கை காரணமாக சுவற்றின் மீதிருந்த பிடியை விடவில்லை முட்டிக்கால் நடுங்கியது தடுமாற்றத்துடன் அடுத்த அடியை தொடங்கினார் வீதியின் மையத்துக்கு வந்தவர் சற்று தடுமாறினார் கண்  பார்வை மங்கியது தலை சுற்றுவது போல் வந்தது தடுமாறினார், தூரத்தில் ஏதோ வாகனம் வருவது போல் சத்தம் வீதியை கடக்க எண்ணம்மிருந்தாலும் கால்கள் ஒத்துழைக்கவில்லை.
தூரத்தில் யாரோ கத்தினார்கள் யோவ்... யோவ்  பெரிசு ஓரம் போய்யா வண்டி வருது, யோவ் பெரிசு காது கேட்கல  வண்டி வருது ஓரம் போய்யா...
யாரோ கத்துவது கேட்டது குமரய்யாவுக்கு கிணற்றிலிருந்து கத்துவது போல் . .
ஆனால் உடல் ஒத்துழைக்க மறுத்தது அந்த நிலையிலும் தன் இயலாமையை நினைத்து வேதனைப்பட்டார் குமரய்யா
ஏதோ வாகனம் அருகில் வந்துவிட்ட சப்தம், சட்டென யாரோ இழுத்து செல்வது போல் தோன்றியது முற்றிலுமாக மயங்கினார் குமரய்யா.
கண்களை திறப்பதற்க்கே சிரமமாக இருந்தது எவ்வளவு நேரம் மயங்கி கிடந்தார் என தெரியவில்லை குமரய்யாவுக்கு, இதமான குளிர்ந்த காற்று உடலை தழுவியது, கண்களை திறந்தார் மனதுக்குள் ஒரு சின்ன சந்தோசம் சொர்க்கத்தின் அரவனைப்பில் இருந்தார் குமரய்யா அதாவது அவர் சொர்க்கம் என நினைத்த அத்த வேப்ப மர நிழலின் அவரனைப்பில் இருந்தார்.  
தன்னை வீதியிலிருந்து மரநிழலில் கொண்டுவந்து போட்ட புண்ணியவானய் அவரது கண்கள் தேடியது யாரும் அகப்படவில்லை, இன்னும் மனித நேயம் அற்று போகவில்லை கடவுளுக்கு மானசீகமாக நன்றி சொன்னார்.
ஆனால் பாசம்தான் மனிதர்களுக்கு முற்றுலுமாக மறத்துப்போய்விட்டது கண்கள் கலங்கின நினைவுகள் பின்னோக்கி சென்றது.
செந்தாமரை . . . செந்தாமரை எங்கம்மா இருக்கே குரல் கொடுத்தப்படி உள்ளே வந்தார் குமரய்யா, செந்தாமரை குமரய்யாவின் மனைவி அதிர்ந்து பேசாதவள் இருக்கு இடமே தெரியாது நல்ல பண்பானவள் அவர்களுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள், கடலூர் பக்கம் குடிகாடு குமரய்யாவுக்கு சொந்தவூர், தொழில் விவசாயம், மாடு, வண்டி, சொந்த வீடு என நிதானமான வசதி இருந்தது குமரய்யாவுக்கு, இருப்பினும் மகள் திருமணத்தின் போது சொஞ்சம் நிலங்கள் கையை விட்டு போனது நல்ல மாப்பிள்ளை என சொஞ்சம் கடன் பட்டு நன்றாக திருமணத்தை செய்து முடித்தார் குமரய்யா. 
மகன்கள் இருவரும் சென்னையில் இருந்தார்கள் சின்ன மகன் இஞ்னியரிங் படித்துக் கொண்டிருந்தான், பெரியவன் கடந்தவருடம் தான் கார்மென்ட் டிசைனிங் படிப்பு முடித்துவிட்டு நல்ல சம்பளத்துக்கு ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தான் வேலைக்கு சேர்ந்த பதினைந்தாம் நாள் மாலையும் கழுத்துமாக ஒரு பெண்ணோடு வந்து நின்றான்.
அப்பா நான் இந்துவை காதலிச்சு கல்யணாம் பண்ணிக்கிட்டேன் . ..  நீங்க ஏத்துக்க மாட்டீங்கன்னு தான்  . .  மென்று முழுங்கினான்
நடந்தது நடந்து போச்சு நல்லபடியாக வாழ்கையை தொடங்கு..
மருமகளை உள்ளே கூட்டிட்டுபோ செந்தாமரை என்றார் குமரய்யா
செந்தாமரை குமரய்யாவுக்கு எதிர்த்து பேசாதவள் இந்துவை உள்ளே கூப்பிட்டாள் செந்தாமரை, வலது காலை வைச்சு உள்ளே வாம்மா.
அப்பா அதுவந்து .  . நாங்க இங்கே இருக்கமுடியாது இந்துவுக்கு இந்த கிராமத்து வீடெல்லாம் பிடிக்காது நாங்க இங்கே தங்க வரல உங்கிட்டே சொல்லிட்டு போலம்னு தான் வந்தோம் என்ற மகன் பதில் எதிர்பராமல் வாசலைநோக்கி நடந்தான்.
தடுக்க முயன்ற  குமரய்யா முகத்தில் புகையை துப்பிச்சென்றது அவர்கள் வந்த பாரீன் கார், செந்தாமைரக்கு துக்கம் தொண்டையை அடைத்தது அழுகையை தவிர அவளால் வேரெதையுமே வெளிப்படுத்த முடியவிலை.
குமரய்யா தடுமாறித்தான் போனார் பார்த்துப் பார்த்து வளர்த்த மகன் பரிதவிக்க விட்டுபோனதை எண்ணி ஊர் கூடி வேடிக்கைப்பார்த்தது, செந்தாமரை கணவனுக்கு ஏற்ப்பட்ட அவமானம் தாங்காமல் வாயடைத்து சுவரோரமாய் சாய்ந்து உட்கார்ந்தாள் கண்களி கண்ணீர் ஆறாய் ஓடியது.
செந்தாமரை  . . . செந்தாமரை எங்கேம்மா இருக்க என்றபடி உள்ளே வந்தார் குமரய்யா அவரது முகம் அவமானத்தால் கருத்துப்போயிருந்தது.
செந்தாமைரை சுவரோரமாய் சாய்ந்தப்படி உட்கார்ந்திருந்தாள் அவளுக்கு சற்று தள்ளி தானும் உட்கார்ந்தார் குமரய்யா, சரி விடு செந்தாமரை ஏதோ ஆசைப்பட்டான், கட்டிக்கிட்டான், அவன் இங்கே இல்லன்னா என்ன... நமக்கு பார்க்கனும்ன்னு தோனிச்சுன்னா போய்ப் பார்த்துட்டு வந்துடப்போறோம் என்னா நான் சொல்றது என்றபடி அவள் தோளை தொட்டார் குமரய்யா செந்தாமரையிடம் பதில் இல்லை.
பயந்துபோனார் குமரய்யா, செந்தாமரை செந்தாமரை அவள் தொளை தொட்டு உலுப்பினார், பதிலில்லை செத்து சரிந்தாள் செந்தாமரை. குமரய்யாவின் அலறல் ஊரைக் கூட்டியது ஊரார் எல்லாம் துக்கம் விசரித்தார்கள் அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தினறிப்போனார் குமரய்யா.
தகவல் சொல்லியனுப்பியும் இரண்டு மகன்களும் வரவில்லை மகள் தமிழரசியும் மாப்பிள்ளையும் மட்டும் வந்தார்கள் வந்த அவர்களும் இரண்டு நாள் கூட தங்காமல் ஏதோதோ காரணம் சொல்லி கிளம்பிப்போனார்கள்.
குமரய்யாவுக்கு வாழ்க்கையே சூன்யமானது செந்தாமரை இல்லாத வாழ்க்கையை அவர் எண்ணிப்பர்க்கவே இல்லை அவள்தான் அவர் உலகம் என வாழ்ந்து வந்தவர் குமரய்யா, வாய்த்த பிள்ளைகளும் எட்டிப்பார்க்கவிலை மறுமுறை.
துக்கம் விசாரிக்க வந்த நணப்ர் ஒருவர் சொன்னார் உன் இரண்டாவது மகனை சென்னையில் பார்த்தேன் ஒரு பெண்ணோடு சுற்றிக்கொண்டிருந்தான் அவனோடு இருந்த சிலரை விசரித்தேன் அது அவனுடைய மனைவி என்றும் ஒரு வாரத்துக்கு முன்புதான் திருமணம் ஆனது என்றும் சொன்னார்.
குமரய்யாவுக்கு கேட்க முடியவில்லை நெஞ்சு அடைத்தது,  நண்பரை வழியனுப்பினார் கண்ணீர் மல்கவீடே வெறிச்சோடிக்கிடந்தது சாப்பிட, குளிக்க  எதுவுமே செய்யத் தொன்றவில்லை குமரய்யாவுக்கு பிரம்மை பிடித்தவர் போல் அமர்ந்து இருந்தார் வாசலில் ஏதோ கார் வந்து நிற்க்கும் சப்தம் கேட்டது, யார் என பார்க்கக்கூட குமரய்யவுக்கு தோன்றவில்லை.

காரிலிருந்து பெரிய மகனும், மருமகளும் வந்திறங்கினார்கள் மகன் அவர்காலில் விழுந்து அழுதான் என்னை மன்னிச்சுடுங்க்கப்பா,, எல்லாம் என்னால் தான் என்னை மன்னிச்சுடுங்க்கப்பா கதறினான் மகன், பெத்தமனம் பித்து என்பார்கள் கலங்கினார் குமரய்யா மகனை கட்டிக்கொண்டார், கவலைப்படாதிர்கள் மாமா இனி நாங்கள் இருக்கிரோம் உங்களுக்கு துணையாக என ஆறுதல் சொன்னாள் மருமகள் குமரய்யாவுக்கு அவள் மகள் போல் தெரிந்தாள் மகள் தமிழரசியின் ஞாபகம் வந்தது.

மகனும் மருமகளும் பழகிய விதத்தை பார்க்கும்போது அவர்கள் குமரய்யாவோடு இங்கேயே தங்க்கிவிடுவர்கள் எனத் தோன்றியது  குமரய்யாவுக்கு அது மனசுக்கு நிம்மதியை தந்தது ஒரு வாரம் ஓடியது குமரய்யா சற்று இயல்பு நிலைக்கு திரும்பினார் மருமகள் சமைத்துப் போட்டாள், ஊரில் எல்லோரும் குமரய்யாவுக்கு இனி பிரச்சனை இல்லை என பேசிக்கொண்டர்கள் கவனித்துக்கொள்ள மகன் இருக்கிறான் என ஆறுதல் சொன்னார்கள்.

குமரய்யா சாப்பிட்டு முடித்து விட்டு கயிற்றுக்கட்டிலில் உடலை கிடத்தினார், மகன் அருகில் வந்தமர்ந்தான், எழ முயன்றவரை கையமர்த்தினான் பரவாயில்லை படுங்கப்பா நான் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்றான் தடுமாற்றமாக

என்னய்யா சொல்லு என்றார் குமரய்யா பதட்டமாக, நானும் இந்துவும் இன்னும் எவ்வளவு நாளைக்கு உங்களோடு இங்க இருக்க முடியும்னு தெரியலைப்பா, ரெண்டுபேருமே ஆபிசுக்கு லீவ் போட்டு விட்டுத்தான் இங்கே வந்து தங்கியிருக்கிறோம் அதனால நீங்க எங்களோடு சென்னைக்கு வந்து தங்க சம்மதிச்சின்னீங்கன்னா... இழுத்தான்.

நான் எப்படிப்பா அங்கே வந்து தங்க முடியும் இங்கே நிலம் வீடெல்லாம் கிடக்கே அதெல்லாம் பராமரிக்கனுமே, அப்புறம் தமிழுக்கு தாய்வீடு இந்த வீடு தானாப்பா அவளும் வந்து போக ஒரு வீடு வேனுமே,

என்னப்பா இப்படி பேசறீங்க தமிழரசி என் தங்கச்சி இல்லையா, என் வீடு அவளுக்கு தாய் வீடு மாதிரித் தானேப்பா அவளும் சென்னையில தானே இருக்கா அவளுக்கு எப்ப் வருனும்னு தோனுதோ அப்ப நம்ம விட்டுக்கு வந்தா போச்சு, நீங்களும் எங்களோட சென்னைக்கு வந்தீட்டீங்கனா தமிழையும் அடிக்கடி உங்களுக்கு தேவைப்படும் போது போய் பார்த்துவரலாம். நீங்களும் இங்கே தனியா இருந்து அவஸ்த்தை பட வேண்டியதில்லை எங்களுக்கும் நீங்க எங்க கூட இருக்கிற நிம்மதி. என முடித்தான் மகன்.

அதுசரிப்பா இந்த வீடு, நிலத்தையெல்லாம் யார் பராமரிகிறது ஆளா வைக்கமுடியும்? என்றார் குமரய்யா.

மருமகள் பாலுடன் வந்தாள் பால் குடிங்க மாமா என்றாள் அனுசரனையாக, மாமா நான் ஒன்னு சொல்லலாமா? இழுத்தாள் மருமகள்

சொல்லுமா  . . நீ என்ன சொல்லனும் என்றார் குமரய்யா

நீங்க தனியா இருந்து கஷ்டப்படக்கூடாது என்பது தான் எங்க விருப்பம் அதுக்கு இந்த வீடும் நிலமும் தடையாக இருக்கும்னு நீங்க நெனைச்சீங்க்கன்னா, உங்களுக்கு விருப்பப்பட்டா இந்த வீட்டையும் நிலத்தையும் வித்துடலாம், அதோட சென்னையில நாங்க இருக்கும் வீடு வாடகை வீடுதான் வீடும் சின்னது, நாளைக்கு குழந்தை குட்டிங்கன்னு ஆச்சுன்னா வேறு வீடு பார்க்க வேண்டிவரும் அதனால இங்குள்ள வீட்டையும், நிலத்தையும் விற்று சென்னையில ஒரு நல்ல வீடு சொந்தமாக விலைக்கு வாங்கலாம். என முடித்தாள் மருமகள்.
அது எப்படிம்மா, இந்த வீட்டோட நிலம் எல்லாம் என் மூன்று பிள்ளைகளுக்கும் சொந்தம் உண்டு அதை எப்படிம்மா ஒரு பிள்ளைக்கே கொடுக்க முடியும் மத்த மகனுக்கும் மகளுக்கும் நான் என்ன பதில் சொல்றது அது பாவம்மா . .! என ஆட்சோபித்தார் குமரய்யா

ஐயோ ! மாமா நான் அப்படி சொல்லவில்லை அவங்க ரெண்டுபேருக்கும் சேரவேண்டியதை நாங்க கொடுத்துடுறோம், நாங்க ரெண்டு பேருமே சம்பாதிக்கிறோம் இல்லியா அதை வச்சு கொஞ்சம் கொஞ்சமா கடனை அடைச்சிடுறோம் நீங்க சம்மதிச்சீங்கன்னா . . . .போதும் இழுத்தாள் மருமகள்.

மேற்க்கொண்டு பேச முயன்றவரை மகனும் மருமகளும் பேச விடவில்லை, ஒருவழியாக அவர்கள் எண்ணத்திற்க்கு தலையாட்ட வைத்தார்கள் குமரய்யாவுக்கு வேறு வழி தெரியவில்லை.

நடக்கப்போகும் விளைவின் விபரீதங்கள் புரியாமல், அவர்களின் நடிப்புப் பேச்சுக்களுக்கு ஏமாந்து போனார் ஏழை விவசாயி குமரய்யா.

மற்ற பிள்ளைகளுக்கு சொல்லாமலே வீடு விற்க்கப்பட்டது நிலமும் தான், விற்றபணம் கையில் வந்தவுடன் சென்னைக்கு கிளம்பினார்கள் மகனும் மருமகளும், சென்னைக்கு போய் வீடு வாங்கி பின் குமரய்யாவை கூட்டி போவதாக  பேச்சு அதுவரை வீடு வாங்கியவரிடம் ஒரு வாரம் அனுமதி கேட்டு குமரய்யா அதே வீட்டில் தங்க வைக்கப்பட்டார்.

ஒருவாரம் ஓடியது, மகனிடமிருந்து எந்தவித தகவலும் இல்லை, போன் மூலமாக முயற்சி செய்தார், போன் அவுட் ஆப் ஆர்டர் என பதில் வந்தது, வீடு வாங்கியவர் வந்து தரக்குறைவாக பேசிவிட்டு கடைசியாக ஒரு நாள் டைம் கொடுத்துவிட்டு போனார். மருமகளை தொடர்புக்கொண்டார், போன் ரிங்க் ஆனது ஆனால் பதிலில்லை மறுமுறை முயன்றார் போன் ஆப் ஆகி இருந்தது.

பரிதவித்து போனார் குமரய்யா, நாளை வீட்டை காலிச் செய்யாவிட்டால் அசிங்க்கமாகிப்போகுமே அவமானமாகிப்போனது அவருக்கு, பலமுறை மகனுக்கும் மருமகளுக்கும் போனில் முயன்று பலனில்லை, முடிவாக சென்னைக்கு பஸ் ஏறினார் வீட்டை பூட்டி சாவியை எதிர் வீட்டில் ஒப்படைத்து வீட்டுக்காரரிடம் கொடுக்கும்படி சொன்னார்.


சென்னை அவருக்கு புதிது அதன் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பாவம் அந்த வயதான விவசாயி தடுமாறித்தான் போனார், மகன் கொடுத்த முகவரியில் தேடினார் அது புதிதாக முளைத்துள்ள ஒரு நகர் பகுதி அங்கு மகன் மருமகள் பெயரில் யாருமே இல்லை, மருமகள் வேலை செய்வதாக சொன்ன கம்பெனியில் போய்த் தேடினார் அங்கு அப்படி யாரும் இல்லை என வெளியே விரட்டினார்கள் தேடித் தேடித் களைத்து போனார் தான் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டிருப்பது புரிந்தது தன் விதியை எண்ணி புலம்பினார் செந்தாமரை என் நிலமையை பார்த்தியா பெத்த பிள்ளையே என்னை ஏமாத்திடுச்சி செந்த்தாமரை, கண்ணீர்விட்டு வாய்விட்டு அரற்றினார். போக வருபவர்கள் வேடிக்கைப் பார்த்தார்கள்.

கையில் காசு இல்லை பசி மயக்கம்   கால்கள் தடுமாறின மயங்கி விழப்போனவரை யாரோ ஒருவர் கொண்டுவந்து வேப்பமர நிழலில் அமரவைத்துவிட்டு போனார். வேப்பமரக் காத்து உடலை தழுவியது இதமாக, பசி வயிற்றை கிள்ளினாலும் இயலாமையினால் எழுந்திருக்க முடியவில்லை அப்படியே படுத்துகிடந்தார் குமரய்யா.

அய்யா, அய்யா! பெரியவரேயாரோ கூப்பிடுவது கேட்டது, கண்களை திறந்துப் பார்த்தார், அங்கே அவரின் வயது ஒத்த மனிதர் தலையில் தொப்பியுடனும் தாடியுடனும் நின்றிருந்தார், எழுந்திருக்க முயன்ற குமரைய்யாவை அவர் கையமர்த்தினார் பொருங்க பெரியவரே, நான் தான் உங்களை வீதியிலிருந்து இங்கு கொன்டுவந்து அமரவைத்தேன் இந்தாங்க இதை குடிங்க என கையில் ஒரு ஜூஸ் பாட்டிலை கொடுத்தார் வாங்க மறுத்த குமரய்யாவை கட்டாயப்படுத்தி குடிக்கச் சொன்னார்.
மனசு மருத்தாலும் பசி அதனை வென்றது வாங்கி குடித்தார், குமரய்யா குடித்த வேகத்தைப் பார்த்த அந்த பெரியவர் புன்னகைத்தார் எத்தனை நாள் பட்டினியோ என எண்ணத்தோன்றியது அந்த பெரியவருக்கு, குடித்து முடித்து நன்றியுடன் பார்த்தார் குமரய்யா, கண்களில் நீர் ததும்பியது ரொம்ப நன்றி ஐயா என்றார் நா தலுதலுக்க

பரவாயில்லை பெரியவரே! உங்களுக்கு எந்த ஊரு, சென்னைக்கு புதுசா, யாரைப் பார்க்க வந்தீங்க என்றார் எந்த பெரியவர்.

பேசத் தடுமாறினார் குமரய்யா என் புள்ளைங்கல தேடிவந்தேன் ஐயா என கண்ணீர் மல்க சொன்னார் குமரய்யா,
என்ன சொல்றீங்க பெரியவரே சின்னப் பிள்ளைங்களா, காணாம போய்ட்டாங்களா என பதற்றத்துடன் கேட்டார் அந்தப் பெரியவர்

இல்லைங்கய்யா வளர்ந்து கல்யாணமான பெரிய பிள்ளைங்க என்றார் குமரய்யா கண்களில் கண்ணீருடன், நீங்க சொல்றது புரியல பெரியவரே என கேள்விக்குறியுடன் பார்த்தார் அவர் குமரய்யாவை.

தன் சொந்த மகனிடமே தான் ஏமாந்த கதையினை சொன்னார் குமரய்யா, அந்தப் பெரியவர் குமரய்யாவை ஆழமாக ஒரு பார்வைப்பார்த்தார், நீங்கள் சொல்வது உண்மையா பெரியவரே என்றார் குமரய்யாவைப் பார்த்து.

ஆமாய்யா சொந்தப் பிள்ளங்க்களாலேயே ஏமாத்தப்பட்டு இன்னிக்கு நடுத்தெருவுல அனாதையா கிடககிறேன் ஐயா அனாதையா கிடக்கிறேன் என வாய்விட்டு புலம்பி அழுதார் குமரய்யா.

காதர் பாய்க்கு எல்லாம் புரிந்தது தன் சொந்தப் பிள்ளைகளால் ஏமாற்றப்பட்ட  ஒரு ஏழை விவசாயி இந்த குமரய்யா, சரி பெரியவரே வாங்க போகலாம் எழுந்திருங்க என்றார் காதர் பாய்,

நீங்க யாரு? என்னை எங்கே கூப்பிடுறிங்க முன்பின் தெரியாத எனக்கு உதவி செய்ஞ்சுறிக்கீங்க அதுக்கு ரொம்ப நன்றி, நீங்க்க தப்பா நினைக்கலைன்னா  நீங்க யாருன்னு நான் தெரிஞ்ச்சுக்கலாமா? எனக் கேட்டார் குமரய்யா. காதர் பாய் கொடுத்த ஜூஸ் குடித்த தெம்பில் சற்று தெளிவாக பேசினார் குமரய்யா.

காதர் பாய் குமரய்யாவை புன்னகையுடன் பார்த்தார், பெரியவரே! என் பேரு காதர், என்னை தெரிஞ்ச்சவங்க செல்லம்மா என்னை பாய்ன்னு கூப்பிடுவாங்க அதனால எல்லோருக்கும் என் பெயர் காதர் பாய்ன்னு  ஆகிப்போச்சு, நானும் உங்களை போலதான், ஒரு நாள் தெருவில தூக்கி எறியப்பட்டேன் அனாதையா, பல லட்சக்கணக்கில் சொத்து சேர்த்த நான் கையில் ஒரு பைசா இல்லாம ஒரு பிச்சைக்காரன் போல தெருவில் தூக்கி எறியப்பட்டேன், ஆனா நான் சோர்ந்து போய்விடவில்லை என்னை எந்த சொந்தங்க்ள் தூக்கி எறிஞ்ச்சாங்களோ அவங்களை விட அதிகாமாக சொந்தங்களை சேர்த்துக்கிட்டேன் வாங்க மத்த விஷயங்களை போய்க்கிட்டே பேசுவோம் என்ற காதர் பாய் அந்த பக்கம் வந்த ஒரு ஆட்டோவை கைக் காட்டி நிறுத்தினார்.

குமரய்யாவை கைத்தாங்க்கலாக ஆட்டோவில் ஏற்றினார் காதர்பாய், பெரியவரே இந்த சென்னையில மூர் மார்க்கெட்ல நான் ஒருபெரிய வியபாரி, எனக்கு மூனு ஆண் பிள்ளைங்க, ரெண்டு பெண் பிள்ளைங்க பெண் பிள்ளங்களுக்கு நல்ல வசதியான இடத்துல கட்டிக் கொடுத்தேன், பசங்களை நல்லா படிக்க வைத்து பெரிய ஆளாக்குனேன். இன்னிக்கு அவங்கல்லாம் பலபேருக்கு வேலைத் தரும் அளவுக்கு பெரிய ஆளாக வளர்ந்து நிக்கிறாங்க, ஆனா நான் மட்டும் அவங்களுக்கு வேண்டாதவனா போய்ட்டேன், ஒருமுறை வியாபரத்துல ஒரு பெரிய தொகை முதலீடு செய்தேன் அது எதிப்பாராத விதமாக நஷ்டத்துல போய்டுச்சு, அந்த அதிர்ச்சியில நான் நோய்வாபய்ப்பட்டேன், என் பிள்ளைங்க யாருமே என்னை கண்டுக்கல ஹாஸ்பிடல் செலவுக்கு கூட பணமில்லாம கஷ்டப்பட்டேன், என் நிலமையை நெனச்சு கவலைப்பட்ட என் மனைவி எதிர்ப்பாராத விதமா மௌத் ஆயிட்டா அவளுடைய இருதி சடங்கைக் கூட என்னால சரியாக செய்யமுடியவில்லை. கையில காசு இல்லாதனால பிரைவேட் ஹாஸ்பிடலிருந்து கவர்மெண்ட் ஹாஸ்பிடலுக்கு மாறினேன், யாருமே வந்து பார்க்கவில்லை அனாதையின்னு வெளியிலே துரத்திட்டாங்க. அழுது புலம்பி அல்லாஹ்வை பிராத்திக்கிறதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை, நோயாளியா ஒரு பிச்சைக்கரனைப் போல இந்த வீதியில சுத்தி வந்தேன்.
அந்த ஆண்டவனுக்கு என் வேதனை புரிந்ததோ எண்ணமோ புரியல என் மனைவி மேல நான் எப்பவோ கட்டியிருந்த இன்சுரன்ஸ் பணம் என்னைத்தேடி வந்தது, என் உறவுகளும் தான் பணத்துக்காக என்னை தேடி வந்த என் உறவுகளை ஏத்துக்க எனக்கு மனம் இல்லை உன்மையான பாசம்னா என்னன்னு புரியாத அவங்களை நான் புறக்கணிச்சேன் என் மனசுலயும் சிந்தனைகளிலிருந்தும் அவர்களை வெளியேத்தினேன்.

என்னைப்போல் எத்தனையோ பேர் தன் சொந்த உறவுகளாலும் பிள்ளைகளாலும் அனாதையாக்கப்பட்டு வீதியில் தள்ளப்படும் இழினிலையை சிந்திச்சேன் அப்படி பாதிக்கப்பட்டவர்களை எல்லாம் சொந்தங்களாக பாவிச்சேன், அவங்களை எல்லாம் என் சொந்தங்களாக  சுமக்க நினைச்சேன் அவர்களுக்காக வாழ நினைச்சேன் என்னுடைய இந்த மூன்று வருடகால முயற்சியில, பேசிக்கொண்டிருந்த காதர் பாய் பேச்சை நிறுத்தினார், ஆட்டோ டிரைவருக்கு வழி சொன்னார் ஆட்டோ ஒரு வளைவில் வளைந்து நின்றது.

குமரய்யா காதர்பாயை ஆச்சரியமாக பார்த்தார், வாங்க பெரியவரே! ஆட்டோவிலிருந்து இறங்கினார் காதர் பாய், குமரய்யாவும் காதர் பாயை பின் தொடர்ந்தார்
அங்கே ஒரு பெரிய கட்டிடம் மின் விளக்குகளால் சோடிக்கப்பட்டு இருந்தது ஒரு அலங்கார மேடை அமைக்கப்பட்டு இருந்தது அங்கு நிறைய பேர் இருந்த்தார்கள் அவர்கள் பெரும்பாலும் 50 அல்லது 55 வயதுக்கு மேற்ப்பட்டவர்களாக இருந்தார்கள் அவரவர்கள் தன் தன் வேலைகளில் மும்முரமாக இருந்தார்கள் காதர் பாய் அவர்களை நோக்கி போனார், குமரய்யா ஒன்றும் புரியாமல் நின்றுக்கொண்டிருந்தார்.

காதர் பாய் அங்கிருந்த ஒருவரிடம் குமரய்யாவைக் காட்டி ஏதோ சொன்னார், அந்த நபர் குமரய்யாவை நோக்கி வந்தார் வந்து குமரய்யாவை அழைத்தார் வாங்க பெரியவரே,

எங்கே என்றார் குமரய்யா புரியாமல், தூரத்திலிருந்து காதர் பாய் அவரோடு போகும்படி குமரய்யாவிடம் சைகையினால் சொன்னார், குமரய்யா அவரை தொடர்ந்தார்
அந்த நபர் குமரய்யாவை ஒரு சின்ன ஹாலுக்குள் கூட்டிச் சென்றார் அங்கு சில பார்சல்கள் வைக்கப்பட்டிருந்தது அதில் ஒன்றை எடுத்து குமரய்யவிடம் கொடுத்தார்
அதில் புதிய வேட்டிச்சட்டை இருந்தது குமரய்யா புரியாமல் பார்த்தார்

பெரியவரே அங்கே பாத்ரும் இருக்கிறது அங்கே போய் குளித்துவிட்டு இந்த ஆடையை மாற்றிக்கொண்டு வாருங்கள் என்றார் அந்த நபர், குமரய்யாவிற்க்கு புரிய்வில்லை ஏன்? இங்கே என்ன நடக்கிறது? என்றார் குமரய்யா பதட்டமாக,

பதட்டப்படாதிர்கள் பெரியவரே! போய் குளித்து விட்டு வாருங்கள் உங்களுக்கு எல்லாம் புரியும் என்றார் அந்த நபர். அதன்படி குளித்துவிட்டு புதுத் துணி மாற்றிக்கொண்டு வந்தார் குமரய்யாஅவருக்காக காத்திருந்த ஒரு நபர் குமரய்யாவை உணவு உண்ணும் இடத்துக்கு அழைத்து சென்றார் அங்கு குமரய்யாவிற்க்கு வடை பாயாசத்துடன் கூடிய உணவு பரிமாரப்பட்டது, அதீத பசி குமரய்யாவை பதில் பேசவிடவில்லை உணவை உண்டு முடித்தார் அங்க்கிருந்த மற்றொருவர் குமரய்யாவை அலங்கார மீடை இருந்த இடத்துக்கு கூட்டி சென்றார்.

அங்கு ஒரு நாற்காலியில் குமரய்யாவை அமர வைத்தார் அங்கு நிறைய பேர் அமர்ந்த்து இருந்தார்கள் மேடையில் சிலர் அமர்ந்து இருந்தார்கள் எல்லோரும் பரப்பரப்பாக இருந்தார்கள் நிறைய பத்திரிக்கையாளர்கள்  எல்லாம் வந்திருந்தார்கள் மேடையில் காதர் பாய் இருப்பார் என எதிர்ப்பார்த்தார் குமரய்யா ஆனால் காதர் பாய் மேடையில் இல்லை. சிறிது நேரத்தில் ஒருவர் மேடையில் பேச வந்தார் வந்திருந்தோர் எல்லோரையும் வாழ்த்தி வரவேற்றார்.

சிறிது நேரத்தில் காதர் பாய் அங்கு வந்தார் மேடையில் பேசும் இடத்துக்கு வந்தார் வந்தோர் எல்லோருக்கும் வணக்கத்தை சொல்லிவிட்டு தனது பேச்சைத் தொடங்கினார்.

மனித வாழ்க்கை உறவுகளால் பின்னி பிணையப்பட்டது உறவுகளில் மாற்றம் இருக்கலாம் ஆனால் உறவுகள் இன்றி மனிதனால் வாழமுடியாது உறவுகள் தானே மனித உணர்வுகளுக்கு வடிகால், ஒருமனிதன் தன்னை உறவுகளாலும் சமுகத்தாலும் புறக்கணிக்கப்படுவானெனில் அவனுடைய வாழ்க்கை கேள்விகுறியாகிவிடும் அதோடு அவனிடம் பொருளாதாரமும் இல்லையெனில் அடுத்து அவனுடைய வாழ்க்கை என்னவாகும் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரியப்போவதில்லை, இந்த நிலைகளை நான் உணர்ந்தவன் எனது வாழ்க்கை இங்குள்ள எல்லோருக்கும் தெரியும், மனித உறவுகளை இந்த சமுதாயம் எதனைக் கொண்டு அளவிடுகிறது அதாவது மனித உறவுகளை எதனைக் கொண்டு மனிதர்கள அளவிடுகிறார்கள் ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானவன் என்பது வரை அவர்களுக்கு இடையிலான உறவு நீடிக்கிறது, அவ்வாறு பூர்த்திசெய்ய இயலாதவன் எனும்போது உறவு வெட்டுப்படுகிறது, இது ஒரு வியாபாரம் போன்றது அதாவது தேவைகளின் அடிப்படியில் தீர்மானிக்கப்படுகிறது ஒரு மனிதன் அவனை நோக்கி வரும் தேவைகளை பூர்த்தி செய்வானகில் அவன் மதிக்கப்படுகிறான், போற்றப்படுகிறான் இல்லையெனில் அவன் அவமதிக்கப்படுகிறான், தூக்கி வீசப்படுகிறான். எனவே மனிதர்கள் தன்னை நோக்கிவரும் தேவைகளை பூர்த்தி செய்பவராக இருக்க வேண்டும் அதாவது நோக்கிவரும் தேவைகளுக்கு சரியான பதிலீடுகளை பெற்று இருக்கவேண்டும், அவைகளை சுமந்து இருக்க வேண்டும் என்னிலையிலும் சுமைத்தாங்கியாக இருக்க வேண்டும்.

அவ்வாறு இல்லையெனில் அவர்கள் தவிர்க்கப்படுவார்கள், அவமதிக்கப்படுவார்கள் துரத்தப்படுவார்கள் தூக்கி எறியப்படுவார்கள். அவ்வாறு உறவுகளால் இழிவுப்படுத்தப்ட்டவர்கள் தான் இங்கே கூடியிருக்கிறோம்.

பாசம் என்ற பதத்திற்க்கு வருவோம், ஒரு பெற்றோர் தனக்கு பிறந்த குழந்தையை பாராட்டி, சீராட்டி வளர்த்து ஆளாக்கிகல்யாணம் செய்துக்கொடுத்து வேலை வாங்க்கிக்கொடுத்து தனது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையயும் தன் குழந்தைகளுக்காக செலவிட்டு அவர்களுக்கு ஒரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்கிறார்கள் தனது வாழ்னாளில் பெரும்பகுதியை செலவிட்டு தன் பிள்ளைகளுக்காக நல்லன தேடித் தரும் பெற்றோர்களுக்கு, அவர்களது பிள்ளைகள் பெற்றோரிடமிருப்பது அனைத்தையும் பறித்துக்கொண்டு அவர்களிடம் இனி பறிப்பதற்க்கு ஒன்றுமில்லை எனத் தெரிந்த பிறகு அவர்களை முதியோர் இல்லத்திற்க்கும் நடுத்தெருவிற்க்கும் நாடு கடத்துகிறார்கள், தன் பிள்ளகள் மீது பாசம் வைத்து அவர்களுக்காக தன் வாழ்னாளை செலவிடும் பெற்றோர்களுக்கு அவர்களின் இறுதி காலத்தில் பாசம் காட்டவும் பரிவுக்காட்டவும்  பிள்ளைகளால் முடிவதில்லை இந்த நிலைதான் எல்லோர் வீட்டிலும் என நான் சொல்ல வரவில்லை ஆனால் இன்றைய சமுதாயத்தில் இத்தகைய இழினிலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருக்கிறது.

பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் இன்று வீதியில் அனாதைகளாகவும், பிச்சைக்காரர்களாகவும் அலைவதை இன்றைய வீதிகளில் நிறையவே காண முடிகிறது இன்றைய கால பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் மீதான பாச பரிவுகள் முற்றிலுமாக மறுத்துப் போய்விட்டது அவர்கள் பெற்றோர்களை ஒரு பணம் காய்க்கும் மரமாகவே நினைக்கிறார்கள் காய்ப்பது குறைந்துப் போனாலோ, அல்லது நின்று போனாலோ அவர்கள் வெட்டி வீதியில் தள்ளிவிடுகிறார்கள் இதுதான் இன்றைய சமுதாயத்தில் பெரும்பாலான வீடுகளில் வயதான பெற்றோர்களின் நிலை.அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் ஒருமித்த குரலாகத்தான் நான் உங்கள் முன்னிலையில் பேசிக்கொண்டிருக்கிறேன்.

இந்த மலர்கள் காப்பகத்தில் 40 க்கும் மேற்ப்பட்டவர்கள் இருக்கிறார்கள் இவர்கள் எல்லோரும் தன் பிள்ளைகளுக்காக சொத்துக்களை எல்லாம் இழந்த்துவிட்டு அதே பிள்ளைகளாலே தெருவிற்க்கு துரத்தப்பட்டவர்கள் தான், ஏன் நானும் அத்தகைய நிலையை அனுபவித்தவன் தான், நான் அனுபவித்த கஷ்டங்கள், மோசமான அனுபவங்கள் என்னை இப்படி ஒரு காப்பகத்தை துவக்கத் தூண்டியது நான் அனுபவித்த கஷ்டங்களை வேறு யாரும் அனுபவிக்க கூடாது என நினைத்தேன் அது இன்று ஒரளவு நனவாகியுள்ளது.

இன்று நாங்கள் புதிய பிறவி எடுத்துள்ளோம், நாங்கள் யாரும் பொழுதை வீணே கழிப்பதில்லை, நாங்களும் உற்பத்தி செய்கிறோம் கைவினப்பொருட்கள் தயாரகின்றன எங்க்கள் கூடத்தில், பள்ளிக்குழந்தைகளுக்கு இலவசகமாக டியுசன் எடுக்கிறோம், விளைனிலங்கள் தொடர்பாக விவசாய ஆலோசனைகள் வழங்குகிறோம், எங்கள் கூடத்தில் நூலகம் உள்ளது பொதுமக்களும் வந்து பயன்பெருகிறார்கள், மனவளக்கலை மற்றும் யோகா பயிற்சிகள் தருகிறோம் எங்கள் கூடத்தில் நல்ல அனுபவங்களை எடுத்துக்கூறும் கதைகள் கட்டுரைகள் உறுவாகின்றன, தேவையுள்ளவர்கள் பயன்பெருகிறார்கள் அன்று நாங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய தகுதி இல்லாதவர்களாக வெளியே வீசப்பட்டோம் ஆனால் இன்று பலர் எங்க்களிடம் வந்து பயன்பெகிறார்கள் அவர்கள் தேவைகளை மனனிறைவுடன் பூர்த்தி செய்துக் கொண்டு திரும்புகிறார்கள்
அன்று நாங்கள் எங்கள் பிள்ளைகளிடம் எதிர்ப்பார்த்தோம் பாசத்தையும் பரிவையும் அது எங்களுக்கு கிடைக்கவில்லை இன்று நாங்கள் எதையும் எதிர்ப்பார்ப்பதில்லை பூத்து சிரிக்கின்றோம் பலன் எதிர்ப்பாரா மலர்களைப் போல் எங்கள் பணி சேவை செய்வதே நாங்கள் பாசத்தையும் பரிவையும் பெறுவதில் அப்பாற்ப்பட்டவர்கள் ஆனால் அதனை கொடுப்பதில் தாரளமனவர்கள் தினம் தினம் மலரும் மலர்களைப் போல் அதனால் தான் மலர்கள் காப்பகம் என் பெயர் வைத்துள்ளேன் எனப் பேசி முடித்தார் காதர் பாய். அந்த இடமே கரவொளியில் அதிர்ந்தது.

கூட்டம் முடிந்து எல்லோரும் களைந்து போனார்கள், காதர்பாய் குமரய்யாவை தேடினார் அவரை காணவில்லை சிலரிடம் விசாரித்தார் யாருக்கும் தெரியவில்லை, பின்னால் இருந்து யாறோ குரல் கொடுத்தார்கள் இவரையா தேடுறிங்க குரல் கேட்டு திரும்பினார் காதர் பாய் தூரத்தில் கைக் கட்டினார்கள் அங்கே குமரய்யா புதிதாக ஒரு செடி ஒன்றை நட்டு பாத்திக்கட்டி தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தார்.

காதர் பாய்க்கு மனதுக்குள் ஒரு சின்ன நிம்மதி, செடிக்கு தண்ணீர் ஊற்றிவிட்டு திரும்பினார் குமரய்யா, அவரைப் புன்னகையுடன் பார்த்தார் காதர் பாய், குமரய்யாவும் புன்னகைத்தார் அந்தப் புன்னகையில் ஒரு புதிய தன்னம்பிக்கை தெரிந்தது.